search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கும்பாபிஷேகம் நடந்ததையும், அதில் பக்தர்கள் கலந்து கொண்டதையும் படத்தில் காணலாம்.
    X
    கும்பாபிஷேகம் நடந்ததையும், அதில் பக்தர்கள் கலந்து கொண்டதையும் படத்தில் காணலாம்.

    வெள்ளியம்பாளையம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

    அவினாசி அருகே வெள்ளியம்பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    அவினாசி அருகே வெள்ளியம்பாளையத்தில் மகாகணபதி, மாரியம்மன், பாலமுருகன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்கள் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 1-ந் தேதி, அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து, பெண்கள் தீர்த்த குடம் எடுத்து வந்தனர்.

    பின்னர் அன்று மாலை 6 மணிக்கு விநாயகர் வழிபாடு, முதல்கால யாகபூஜை நடந்தது. 2-ந்தேதி காலை 9 மணிக்கு 2-ம் காலயாக பூஜை, தீபாராதனை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு 3-ம்கால யாகபூஜை, இரவு 9 மணிக்கு அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் நடந்தது.

    நேற்று காலை 6.30 மணிக்கு 4-ம் கால யாக பூஜை நடைபெற்றது. அதை தொடர்ந்து காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கோவில் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து தசதரிசனம், தசதானம், மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

    கும்பாபிஷேகத்தில் அவினாசி, ஆட்டையாம்பாளையம், சுண்டக்காம்பாளையம், வெள்ளியம்பாளையம், நாதம்பாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி ஆன்மிக சொற்பொழிவு, சிலம்பாட்டம், தீப்பந்த வீர விளையாட்டு, பக்தி இன் னிசை கச்சேரி ஆகியவை நடந்தன.
    Next Story
    ×