என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கோவை சித்தாபுதூர் அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம்
Byமாலை மலர்26 Jun 2017 3:13 AM GMT (Updated: 26 Jun 2017 3:13 AM GMT)
கோவை சித்தாபுதூர் அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோவை சித்தாபுதூரில் பிரசித்தி பெற்ற அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 18-ந் தேதி மாலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து பஞ்சகவ்ய பூஜை, கலச பூஜை, கலசாபிஷேகம், பிராயச்சித்த ஹோமம், உச்சிக்கால பூஜை, அத்தாழ பூஜை, ஹரிவராசனம், சாந்தி ஹோமம், குண்ட சுத்தி, பிரம்ம கலச பூஜை, தத்துவ ஹோமம், அதிவாச ஹோமம், பரிகலசாபிஷேகம், பிம்ப சுத்தி பூஜை, சம்ஹார தத்துவ ஹோமம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. பின்னர் மதியம் 12.30 மணிக்கு கோவில் கோபுர கலசம் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அப்போது கோவில் வளாகத்தில் கூடியிருந்த பக்தர்கள் ‘சாமியே சரணம் அய்யப்பா‘ என்று பக்தி கோஷம் எழுப்பினர். விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எம்.பி.க்கள் நாகராஜன், ஏ.கே.செல்வராஜ், அம்மன் அர்ச்சுனன் எம்.எல்.ஏ. உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. பின்னர் மதியம் 12.30 மணிக்கு கோவில் கோபுர கலசம் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அப்போது கோவில் வளாகத்தில் கூடியிருந்த பக்தர்கள் ‘சாமியே சரணம் அய்யப்பா‘ என்று பக்தி கோஷம் எழுப்பினர். விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எம்.பி.க்கள் நாகராஜன், ஏ.கே.செல்வராஜ், அம்மன் அர்ச்சுனன் எம்.எல்.ஏ. உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X