search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கோபுர கலசங்களுக்கு தந்திரி சிவபிரசாத் நம்பூதிரி புனித நீர் ஊற்றுவதையும், பக்தர்கள் தரிசனம் செய்வதையும் காணலாம்
    X
    கோபுர கலசங்களுக்கு தந்திரி சிவபிரசாத் நம்பூதிரி புனித நீர் ஊற்றுவதையும், பக்தர்கள் தரிசனம் செய்வதையும் காணலாம்

    கோவை சித்தாபுதூர் அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம்

    கோவை சித்தாபுதூர் அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    கோவை சித்தாபுதூரில் பிரசித்தி பெற்ற அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 18-ந் தேதி மாலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து பஞ்சகவ்ய பூஜை, கலச பூஜை, கலசாபிஷேகம், பிராயச்சித்த ஹோமம், உச்சிக்கால பூஜை, அத்தாழ பூஜை, ஹரிவராசனம், சாந்தி ஹோமம், குண்ட சுத்தி, பிரம்ம கலச பூஜை, தத்துவ ஹோமம், அதிவாச ஹோமம், பரிகலசாபிஷேகம், பிம்ப சுத்தி பூஜை, சம்ஹார தத்துவ ஹோமம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. பின்னர் மதியம் 12.30 மணிக்கு கோவில் கோபுர கலசம் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அப்போது கோவில் வளாகத்தில் கூடியிருந்த பக்தர்கள் ‘சாமியே சரணம் அய்யப்பா‘ என்று பக்தி கோஷம் எழுப்பினர். விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எம்.பி.க்கள் நாகராஜன், ஏ.கே.செல்வராஜ், அம்மன் அர்ச்சுனன் எம்.எல்.ஏ. உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×