என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருவையாறு ஐயாறப்பர் கோவில் தேரோட்டம் இன்று நடக்கிறது
Byமாலை மலர்8 May 2017 7:53 AM GMT (Updated: 8 May 2017 7:53 AM GMT)
தஞ்சையை அடுத்த திருவையாறில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி தேரோட்டம் இன்று நடக்கிறது.
தஞ்சையை அடுத்த திருவையாறில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான ஐயாறப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த மாதம் 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலையில் பல்லக்கில் சாமி வீதிஉலாவும், இரவில் ஆதிசேஷவாகனம், பூதவாகனம், கைலாசவாகனம், காமதேனுவாகனம், யானைவாகனம், குதிரை வாகனத்தில் சாமி வீதிஉலாவும் நடைபெற்றது.
விழாவின் 9-வது நாளான இன்று(திங்கட்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. ஐயாறப்பர்-அறம்வளர்த்த நாயகியுடன் தேரில் எழுந்தருளி, பஞ்சமூர்த்தி சாமிகளுடன் திருவையாறு தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி வழியாக தேர் இழுத்து வரப்பட்டு கீழவீதியில் உள்ள தேர்நிலையை வந்தடைகிறது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. தொடர்ந்து காவிரி ஆற்றில் வாணவேடிக்கையும், இசை நிகழ்ச்சியும் நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சப்தஸ்தான பெருவிழாவையொட்டி 11-ந் தேதி காலை ஐயாறப்பர்-அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வரர்-சுயசுவாம்பிகையுடன் வெட்டிவேர் பல்லக்கிலும் புறப்பட்டு திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி ஆகிய ஊர்களுக்கு சென்று அன்று இரவு 6 ஊர் பல்லக்குகளும் தில்லைஸ்தானத்தில் உள்ள காவிரி ஆற்றில் சங்கமிக்கிறது. பின்னர் வாணவேடிக்கை நடக்கிறது. மறுநாள் 12-ந் தேதி தில்லைஸ்தானம் பல்லக்குடன் சேர்த்து 7 ஊர் பல்லக்குகளும் புறப்பட்டு திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியை வந்தடைகிறது. அங்கு பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடக்கிறது.
இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் எல்லா ஊர் பல்லக்குகளும் ஐயாறப்பர் கோவிலுக்கு சென்று அங்கு தீபாராதனை காட்டப்படுகிறது. இதைத்தொடர்ந்து எல்லா ஊர் பல்லக்குகளும் அங்கிருந்து புறப்பட்டு அந்தந்த ஊர்களுக்கு செல்லும். இதற்கான ஏற்பாடுகளை தருமபுர ஆதீனம் இளைய சன்னிதானம் தலைமையில் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
விழாவின் 9-வது நாளான இன்று(திங்கட்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. ஐயாறப்பர்-அறம்வளர்த்த நாயகியுடன் தேரில் எழுந்தருளி, பஞ்சமூர்த்தி சாமிகளுடன் திருவையாறு தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி வழியாக தேர் இழுத்து வரப்பட்டு கீழவீதியில் உள்ள தேர்நிலையை வந்தடைகிறது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. தொடர்ந்து காவிரி ஆற்றில் வாணவேடிக்கையும், இசை நிகழ்ச்சியும் நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சப்தஸ்தான பெருவிழாவையொட்டி 11-ந் தேதி காலை ஐயாறப்பர்-அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வரர்-சுயசுவாம்பிகையுடன் வெட்டிவேர் பல்லக்கிலும் புறப்பட்டு திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி ஆகிய ஊர்களுக்கு சென்று அன்று இரவு 6 ஊர் பல்லக்குகளும் தில்லைஸ்தானத்தில் உள்ள காவிரி ஆற்றில் சங்கமிக்கிறது. பின்னர் வாணவேடிக்கை நடக்கிறது. மறுநாள் 12-ந் தேதி தில்லைஸ்தானம் பல்லக்குடன் சேர்த்து 7 ஊர் பல்லக்குகளும் புறப்பட்டு திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியை வந்தடைகிறது. அங்கு பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடக்கிறது.
இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் எல்லா ஊர் பல்லக்குகளும் ஐயாறப்பர் கோவிலுக்கு சென்று அங்கு தீபாராதனை காட்டப்படுகிறது. இதைத்தொடர்ந்து எல்லா ஊர் பல்லக்குகளும் அங்கிருந்து புறப்பட்டு அந்தந்த ஊர்களுக்கு செல்லும். இதற்கான ஏற்பாடுகளை தருமபுர ஆதீனம் இளைய சன்னிதானம் தலைமையில் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X