என் மலர்
நீங்கள் தேடியது "Vijay Vasanth MP"
- லட்சகணக்கான மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
- பட்டம் பெறும் இளைஞர்கள் வேலை வாய்ப்புகள் இன்றி திணறி வருகின்றனர்.
பாராளுமன்றத்தில் வேலைவாய்ப்பின்மையால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகள் குறித்து விவாதிக்க விஜய் வசந்த் எம்பி ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தார். அதில் கூறியிருப்பதாவது:-
வேலையின்மை காரணமாக லட்சகணக்கான மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இளைஞர்கள், பெண்கள், பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் என, இதன் பாதிப்புக்கு உள்ளாகி திணறும் மக்கள் ஏராளம்.
குறிப்பாக கிராமப்புறங்களில் வேலையின்மை மிக அதிகமாக ஏற்பட்டு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஏற்ற தாழ்வை சரி செய்ய அரசு உரிய நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளவில்லை.
மேலும் படித்து பட்டம் பெறும் இளைஞர்கள் வேலை வாய்ப்புகள் இன்றி திணறி வருகின்றனர். மத்திய அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு முன்வரவில்லை.
இந்தியாவின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக உள்ள இளைஞர்கள் வேலையின்றி அலைவது இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. மேலும் வேலை வாய்ப்புகள் இல்லாதது பல சமூக சீர்கேடுகளுக்கும் காரணமாக அமைந்துள்ளது.
இந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் அமையும் வண்ணம் அவர்களது திறனை மேம்படுத்த பயிற்சிகள் அளிக்க வேண்டியது அரசின் கடமை.
மேலும் தொழில் முனைவோர்களையும் ஊக்கபடுத்தி அவர்கள் தொழில்கள் தொடங்கவும் அவர்கள் மூலம் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவும் அரசு ஆவன செய்ய வேண்டியது கட்டாயம்.
நாட்டில் இன்று நிலவி வரும் இந்த மிக முக்கியமான மக்கள் பிரச்சனையை குறித்து பாராளுமன்றத்தை ஒத்தி வைத்து விவாதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- தேவாலயத்தின் பங்கு தந்தையை சந்தித்து ஆசி பெற்றார்.
- மாவட்ட, மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரியில் உள்ள புகழ்பெற்ற தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தின் 10ம் திருவிழாவையொட்டி தங்கத் தேர் பவனியை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து புனித அலங்கார உபகார மாதா தேவாலயத்தின் பங்கு தந்தை அருட் பணி ஆன்றணி அல்காதர் அவர்களை சந்தித்த அவர் ஆசி பெற்றார்.

நிகழ்ச்சியில் காங்கிரஸ் வட்டார தலைவர்கள், மாநில பொது குழு உறுப்பினர்கள், வட்டார, மாவட்ட, மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- விஜய் வசந்த் எம்.பி. தனது சொந்த செலவில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு மூன்று சக்கர சைக்கிளை வழங்கினார்.
- கொண்டாட்டத்தில் மாவட்ட,வட்டார தலைவர்கள், மாநில மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் உள்ள எம்.பி. அலுவலகத்தில் காங்கிரஸ் சார்பில் பொங்கல் விழா நேற்று நடந்தது. விஜய் வசந்த் எம்.பி. குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். மண்பானையில் மகளிரணியினர் பொங்கலிட்டனர்.
பின்னர் விஜய் வசந்த் எம்.பி. தனது சொந்த செலவில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு மூன்று சக்கர சைக்கிளை வழங்கினார்.
விழாவில் கிழக்கு மாவட்ட தலைவர் கே.டி.உதயம், மேற்கு மாவட்ட தலைவர் பினுலால் சிங், அகில இந்திய காங்கிரஸ் போலிங் பூத் கமிட்டி தலைவர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து விஜய் வசந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
அதில், "நாகர்கோவிலில் உள்ள நமது அலுவலகத்தில் காங்கிரஸ் குடும்பத்தினருடன் இன்று பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடினோம். மாவட்ட,வட்டார தலைவர்கள், மாநில மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்" என்று குறிப்பிட்டிருந்தார்.
- நேருயுவகேந்திரா அமைப்பின் பாண்டிச்சேரி மற்றும் தமிழக நிர்வாகி செந்தில்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- நிகழ்ச்சியில் இயற்கை காய்கறிகள் மற்றும் தானிய வகைகளின் கண்காட்சியும் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம் அழிக்கால் பகுதியில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வளாகத்தில் நேருயுவகேந்தரா அமைப்பின் சார்பில் கலாச்சார விழா நடைபெற்றது.
இந்த விழாவை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். மேலும் அங்கு நடைபெற்ற கண்காட்சி மற்றும் இளைஞர்களை விளையாட்டில் ஊக்குவித்தார்.
நேருயுவகேந்திரா அமைப்பின் பாண்டிச்சேரி மற்றும் தமிழக நிர்வாகி செந்தில்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் இயற்கை காய்கறிகள் மற்றும் தானிய வகைகளின் கண்காட்சியும் நடைபெற்றது.
பின்னர், விழாவில் பேசிய கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், " நேருயுவகேந்திரா அமைப்பு இது போன்று மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. குறிப்பாக மாணவ மாணவிகள் கல்வியில் மட்டும் ஆர்வம் செலுத்தாமல் விளையாட்டு போட்டிகளிலும் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை நிரூபிக்க வேண்டும். இதில் அவர்கள் வெற்றி தோல்வியை பற்றி கவலைப்பட கூடாது. வருங்காலங்களில் கல்வி அல்லாத பிற தகுதிகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதால் இதனை மாணவர்கள் பின்பற்ற வேண்டும்" என்று கூறினார்.
- விஜய் வசந்த் நற்பணி மன்றத்தின் சார்பாக பிறந்தநாள் கொண்டாட்டம்.
- இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்தின் 40 வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது.
இதை முன்னிட்டு விஜய் வசந்த் நற்பணி மன்றத்தின் சார்பாக நேற்று கன்னியாகுமரி ஆசாரி பள்ளம் மருத்துவமனையில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் விஜய் வசந்த் அவர்களின் ஆதரவாளரும் தீவிர ரசிகருமான ஆ.சுபுகான் தங்க மோதிரம் மற்றும் சீர் வரிசைகள் வழங்கினார்
இந்நிகழ்ச்சியில் அக்ரம் கான், ஷேக் செய்யது, டாக்டர் தினேஷ், ஆரோக்கிய ராஜன், சாந்தி, எமில்டா, பனிமேரி, நித்யா மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- இரவு நேர ஏரநாடு விரைவு ரெயில் குழித்துறை ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- புதிதாக அறிமுகமாக உள்ள சென்னை-நெல்லை 'வந்தே பாரத்' ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டித்து இயக்க வேண்டும்.
சென்னை:
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தென்னக ரெயில்வே பொது மேலாளரை சந்தித்து மனு அளித்தார்.
வேளாங்கண்ணிக்கு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள பண்டிகை கால சிறப்பு ரெயில் நாகர்கோவிலில் இருந்து சனிக்கிழமை மதியம் புறப்பட்டு அன்று நள்ளிரவு வேளாங்கண்ணி சென்றடைகிறது. அதே ரெயில் ஞாயிற்றுக்கிழமை காலை வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு இரவு நாகர்கோவில் வந்தடைகிறது.
ஆகையால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நேர அட்டவணையை மாற்றி சனிக்கிழமை மாலை நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை வேளாங்கண்ணி சென்றடையும் வகையிலும் ஞாயிற்றுக்கிழமை மாலை வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு திங்கள் காலை நாகர்கோவில் வந்தடையும் வகையிலும் மாற்ற வேண்டும்.
அதுபோல கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா காலத்திற்கு முன்பிருந்தது போல் மதுரை-புனலூர் ரெயில் ஆரவ்வாய் மொழி பள்ளியாடி குழித்துறை மேற்கு போன்ற நிலையங்களில் நிறுத்த வேண்டும். நாகர்கோவில்-கோட்டயம் ரெயில் நாகர்கோவில் டவுன், பள்ளியாடி குழித்துறை மேற்கு ஆகிய இடங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவு நேர ஏரநாடு விரைவு ரெயில் குழித்துறை ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிதாக அறிமுகமாக உள்ள சென்னை-நெல்லை 'வந்தே பாரத்' ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டித்து இயக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- சிறப்பு விருந்தினர்களாக குமரி எம்.பி விஜய்வசந்த், குளச்சல் எம்.பி ஜே.ஜி.பிரின்ஸ் கலந்துக் கொண்டனர்.
- பிறந்த நாள் முன்னிட்டு 121 மாணவ மாணவிகளுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டது.
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 121 வது பிறந்தநாளை முன்னிட்டு, குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் கே.டி.உதயம் தலைமையில் பிறந்த நாள் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜி.பிரின்ஸ் ஆகியோர் கலந்துகொண்டு கேக் வெட்டியும், 121 மாணவ மாணவிகளுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கியும் சிறப்பித்தனர்.
காங்கிரஸ் பேரியக்க மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள், மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், வட்டார நிர்வாகிகள், பேரூராட்சி நிர்வாகிகள், ஊராட்சிமன்ற நிர்வாகிகள், காங்கிரஸ் பேரியக்க துணை அமைப்புகளின் நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
- மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் , பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி.
- வசந்த் & கோ நிறுவனம் சார்பில் நடைபெற்றது.
கன்னியாகுமரியில் ரோகிணி பொறியியல் கல்லூரியில் வசந்த் & கோ நிறுவனம் சார்பில் 10 , 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்.பி, கலந்துகொண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
- வாக்களித்து வெற்றி பெற செய்த மக்களுக்கு விஜய் வசந்த் நன்றி தெரிவித்தார்.
- விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
கன்னியாகுமரி தொகுதி எம்.பி., விஜய் வசந்த் இன்று, விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நன்றி பிரச்சார பயணம் மேற்கொண்டார்.

விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உண்ணாமலைக்கடை, கொல்லஞ்சி, நட்டாலம், நல்லூர், விளாத்துறை ஆகிய பகுதிகளில் இன்று வாக்களித்து வெற்றி பெற செய்த மக்களுக்கு விஜய் வசந்த் நன்றி தெரிவித்தார்.

இதேபோல், தோவாளை செக்கர்கிரி அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் மற்றும் நெடுவிளை அருள்மிகு சிவ சுடலை மாடசாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேக நிகழ்ச்சிகளில் பக்தர்களுடன் இன்று விஜய் வசந்த் எம்.பி கலந்து கொண்டார்.

தொடர்நது, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சிகள் தொடர்பான புகைப்படங்கள் விஜய் வசந்த் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
- மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்திற்கு எம்.பி. விஜய் வசந்த் தலைமை ஏற்று நடத்தினார்.
- இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்திற்கு தலைமை ஏற்று, மாவட்டத்தின் பல்வேறு வளர்ச்சி மற்றும் மக்கள் நலன் குறித்து ஆய்வு செய்தார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள், நாகர்கோவில் மாநகர மேயர் மற்றும் துறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டம் தொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் எம்.பி. விஜய் வசந்த் பகிர்ந்துள்ளார்.
- முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்.
- பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் முன்னிலை வகித்தார்.
நாகர்கோவிலில் இன்று முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், Dr. தாரகை கத்பட், நாகர்கோவில் மாநகர மேயர் ரெ.மகேஷ், விளையாட்டுத்துறை அதிகாரிகள் மற்றும் ஏராளமான விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
- சாலையில் ஏற்பட்டுள்ள குண்டு, குழிகளை மூட உத்தரவிட்டார்.
- நிரந்தரமாக தேசிய நெடுஞ்சாலை சரி செய்யப்படும்.
கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், அங்குள்ள தேசிய நெடுஞ்சாலைக்கு சென்று ஆய்வு செய்தார்.
அப்போது சாலையை சீரமைக்க 14.87 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில், தற்போது சாலை மிகவும் பழுதடைந்து மக்கள் பயணிக்க சிரமப்படுகின்றனர்.
எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு ஒப்பந்தக்காரர் இறுதி செய்வதற்கு முன் சாலையில் ஏற்பட்டுள்ள குண்டு குழிகளை மூட வேண்டும், உடனடியாக சாலைகளை செப்பனிடவும் உத்தரவிட்டார். இதையடுத்து இன்று குழித்துறை பகுதியில் சாலையை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றது.

மேலும் நெடுஞ்சாலை துறை மற்றும் நகராட்சி அதிகாரிகளிடம் விஜய் வசந்த் எம்பி பேசி சாலையை நல்ல முறையில் சீரமைக்க அறிவுறுத்தினார்.
இதையடுத்து ஓடையில் நீர் செல்ல முடியாமல் மழை நீர் சாலையில் தங்குவதால் சாலை சேதமடைவதை உணர்ந்து ஜே.சி.பி. எந்திரம் மூலம் ஓடையை தூர் வாரவும் கோரினார்.

இது தற்காலிகமான தீர்வு தான் எனவும் கூடிய விரைவில் நிரந்தரமாக தேசிய நெடுஞ்சாலை சரி செய்யப்படும் எனவும் உறுதி அளித்தார்.