என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Euro NCAP"
- அம்சங்களை இயக்குவதற்கு டச் கண்ட்ரோல்களையே வழங்குகின்றன.
- செலவீனமும் குறையும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
ஆட்டோமொபைல் துறையில் அதிநவீன தொழில்நுட்பங்களின் வரவு காரணமாக கார் உற்பத்தியாளர்கள் தங்களது மாடல்களில்- அளவில் பெரிய தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்கள், டிஜிட்டல் காக்பிட் மற்றும் ஏராளமான டச் கண்ட்ரோல்களை வழங்குகின்றன. இதன் காரணமாக கார்களின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஏராளமான பட்டன்கள் காணாமல் போயின.
பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து, ஓட்டுநர்கள் கவனம் சிதறுவதை தடுக்கும் வகையில் யூரோ என்கேப் (NCAP) புதிய விதிகளை அமலுக்கு கொண்டுவரும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய விதிகளின் படி ஐந்து நட்சத்திர குறியீட்டை பெறுவதற்கு கார்களின் டர்ன் சிக்னல்கள், வைப்பர் உள்ளிட்டவைகளை இயக்க கட்டாயமாக பட்டன்களை வழங்க வேண்டும்.
கார் உற்பத்தியாளர்கள் டர்ன் சிக்னல்கள், ஹாரன், வைப்பர்கள், எச்சரிக்கை மின்விளக்கை இயக்குவது, அவசர அழைப்புகளை மேற்கொள்வது போன்ற வசதிகளை இயக்க பட்டன்கள் மற்றும் டயல்களை வைத்துள்ளன. எனினும், டெஸ்லா, வோக்ஸ்வேகன் போன்ற கார் உற்பத்தியாளர்கள் பல்வேறு அம்சங்களை இயக்குவதற்கு டச் கண்ட்ரோல்களையே வழங்குகின்றனர்.
இவ்வாறு செய்யும் போது இன்ஃபோடெயின்மென்டிலேயே பல்வேறு வசதிகளும் வழங்கப்படுகின்றன. வழக்கமான கண்ட்ரோல்களை வழங்குவதை விட அதிநவீன டச் ஸ்கிரீன்களை பயன்படுத்தும் போது செலவீனமும் குறையும் என புதிய விதிகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
"அதிகளவில் தொடுதிரை பயன்படுத்துவது சந்தை முழுக்க பிரச்சினையை ஏற்படுத்துகிறது. கிட்டத்தட்ட அனைத்து வாகன உற்பத்தியாளரும் சென்ட்ரல் டச் ஸ்கிரீன்களில் மிக முக்கிய கண்ட்ரோல்களை வழங்குகின்றன. இதன் காரணமாக ஓட்டுநரின் கவனம் சிதைந்து, விபத்துகள் ஏற்படும் ஆபத்தை அதிகப்படுத்துகிறது," என யூரோ என்கேப் திட்ட அதிகாரி மேத்யூ அவெரி தெரிவித்துள்ளார்.
- மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் EQE எலெக்ட்ரிக் கார் மாடல் யூரோ NCAP டெஸ்டிங்கில் பெற்ற புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளது.
- இந்த எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் 590 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் EQE மாடல் யூரோ NCAP டெஸ்டிங்கில் ஐந்து நட்சத்திர புள்ளிகளை பெற்று அசத்தி இருக்கிறது. பெரியவர்கள் பயணிக்கும் போது எவ்வளவு பாதுகாப்பு வழங்குகிறது என்ற சோதனையில் 38-க்கு 36.4 புள்ளிகளை புதிய பென்ஸ் EQE பெற்று இருக்கிறது. இதே போன்று சிறியவர்களுக்கு பாதுகாப்புக்கான சோதனையில் 49-க்கு 45 புள்ளிகளை பெற்றுள்ளது.
யூரோ NCAP டெஸ்டிங்கில் பென்ஸ் EQE 350+ வேரியண்ட் கலந்து கொண்ட நிலையில், இந்த புள்ளிகள் வலது புறம் மற்றும் இடது புற ஸ்டீரிங் கொண்ட மாடல்களுக்கானது தான். முதல் முறையாக யூரோ NCAP டெஸ்டிங்கில் மெர்சிடிஸ் பென்ஸ் ஆக்டிவ் எமர்ஜென்சி ஸ்டாப் அசிஸ்ட் சோதனை நடத்தப்பட்டது. இந்த அம்சம் வழங்கியதற்காக EQE மாடல் யூரோ NCAP பாராட்டை பெற்றது.
சாலையில் கடந்து செல்லும் பயனர்களுக்கு இந்த கார் எவ்வளவு பாதுகாப்பானது என்ற சோதனையில் EQE மாடல் 45.1 மற்றும் 13.1 புள்ளிகளை பெற்று இருக்கிறது. இவை பாதசாரிகள் மற்றும் சைக்கிளில் செல்வோருக்கு இந்த கார் எவ்வளவு பாதுகாப்பாக விளங்குகிறது என்பதை வெளிப்படுத்துகிறது.
புதிய மெர்சிடிஸ் பென்ஸ் EQE 350 4மேடிக் வெர்ஷன் முழு சார்ஜ் செய்தால் 558 கிலோமீட்டர் வரை செல்கிறது. இந்த காரின் செயல்திறன் 765 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. EQE 500 4மேடிக் மாடல் முழு சார்ஜ் செய்தால் 547 கிலோமீட்டர் வரை செல்லும். இதன் டூயல் மோட்டார் செட்டப் 402 ஹெச்பி பவர், 858 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.
AMG மாடலின் பேஸ் வேரியண்ட் EQE 43 4மேடிக் மாடல் டூயல் மோட்டார் செட்டப் 469 ஹெச்பி பவர், 858 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. EQE 43 4மேடிக் எஸ்யுவி முழு சார்ஜ் செய்தால் 488 கிலோமீட்டர் வரை செல்லும். இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.3 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 210 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது.
Photo Courtesy: Euro NCAP
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்