search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்தியா கூட்டணி பெரும்பான்மை பெறும்- வாக்களித்த பின்னர் கே.என்.நேரு பேட்டி
    X

    இந்தியா கூட்டணி பெரும்பான்மை பெறும்- வாக்களித்த பின்னர் கே.என்.நேரு பேட்டி

    • தமிழ்நாட்டு மக்கள் முழுவதுமாக முதலமைச்சரின் பின்னால் இருக்கிறார்கள்.
    • பா.ஐ.க. டெபாசிட் இழக்குமா என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள்.

    திருச்சி:

    திருச்சி தில்லைநகர் மக்கள் மன்றத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும், தி.மு.க. முதன்மை செயலாளருமான கே.என். நேரு தனது வாக்கை பதிவு செய்தார். அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை விட, யார் அமைக்க கூடாது என்பதை கருத்தில் கொண்டு வாக்களிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பிரசாரத்தின் போது பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.

    தற்போது இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் என்கிற நிலை வந்துள்ளது. தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அமோகமாக வெற்றி பெறுவார்கள்.

    மத்திய அரசின் அதிகாரத்தைக் கொண்டு பா.ஜ.க. மீண்டும் ஆட்சி அமைப்போம் என கூறுகிறார்கள் அவ்வாறு எல்லாம் நடக்காது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க கூடிய அளவிற்கு பெரும்பான்மை பெறும்.

    தமிழ்நாட்டு மக்கள் முழுவதுமாக முதலமைச்சரின் பின்னால் இருக்கிறார்கள். சேலத்தில் வெற்றி பெறப்போவது செல்வ கணபதி தான்.

    பா.ஐ.க. டெபாசிட் இழக்குமா என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள்

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×