search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    இந்தவார சமையல் டிப்ஸ் உங்களுக்காக....
    X

    இந்தவார சமையல் டிப்ஸ் உங்களுக்காக....

    • கத்தரிக்காய் குழம்பு சமைக்கும்போது நெய்யில் வதக்கி சேர்த்தால் மணம் கூடும்.
    • ஊறுகாய்களில் கடுகு எண்ணெய்யை சேர்த்தால் கெடாமல் இருக்கும்.

    * புதினா, தக்காளி இரண்டையும் அரைத்து, பஜ்ஜி மாவில் கலந்து கலர்புல் பஜ்ஜிகள் செய்யலாம்.

    * ரசத்திற்கு புளி கரைக்கும்போது சிறிது வெல்லமும் சேர்த்து கரைத்தால் சுவை கூடும்.

    * கடைகளில் இருந்து வாங்கி வரும் காய்கறிகளை சிறிது நேரம் எலுமிச்சை சாறு கலந்த நீரில் முக்கி வைத்தால் அவற்றின் மீது தெளிக்கப்பட்டிருக்கும் ரசாயனத்தின் வீரியம் குறையும்.

    * வெங்காயம், பூண்டு, உருளைக்கிழங்கு, தேன், வாழைப்பழம், பூசணி இவற்றை பிரிட்ஜில் வைக்கக் கூடாது.

    * தேங்காய் சட்னியில் தண்ணீர் சேர்ப்பதற்கு பதிலாக சிறிது தேங்காய் பால் கலந்தால் மணமும், சுவையும் கூடும்.

    * மாங்காய், எலுமிச்சை ஊறுகாய்களில் சிறிது கடுகு எண்ணெய்யை சேர்த்தால் நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.

    * கேரட், பீட்ரூட்டை துருவி தோசை மாவில் கலந்து தோசை வார்த்தால் கண்ணைக் கவரும் கலர்புல் தோசை ரெடி.

    * கத்தரிக்காய் குழம்பு சமைக்கும்போது கத்தரிக்காயை தனியாக நெய்யில் வதக்கி குழம்பில் சேர்த்தால் மணம் கூடும்.

    * கிழங்கு வகைகளை சமைக்கும்போது அரிசி மாவு, மிளகாய்த்தூள், பெருங்காயம் கலவையில் கிழங்குகளை புரட்டி எடுத்து பின் வதக்கினால், காரம், மணம் சூப்பராய் இருக்கும்.

    * கீரை சமைக்கும்போது மஞ்சள்தூள் கலந்த சுடுநீரில் சிறிது நேரம் மூழ்க வைத்துவிட்டு சமைத்தால் கீரையின் நிறமும் மாறாது, ரசாயன பாதிப்பும் இருக்காது.

    Next Story
    ×