செய்திகள்
வேலூர், அணைக்கட்டில் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று 2-வது கட்டமாக மீண்டும் வேலூர் தொகுதியில் பிரசாரம் செய்கிறார். இன்று மாலை 5 மணிக்கு அணைக்கட்டு பஸ்நிலையத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
வேலூர்:
வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு 5-ந் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தல் பிரசாரம் நாளை சனிக்கிழமை மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இதனால் தலைவர்கள் உச்சகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் ஏற்கனவே முதல் கட்ட தேர்தல் பிரசாரம் செய்திருந்தனர்.
2-வது கட்டமாக நேற்று ஓ.பன்னீர்செல்வம் ஆலங்காயம், ஆம்பூரில் பிரசாரம் செய்தார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று 2-வது கட்டமாக மீண்டும் வேலூர் தொகுதியில் பிரசாரம் செய்கிறார். இன்று மாலை 5 மணிக்கு அணைக்கட்டு பஸ்நிலையத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
இந்த கூட்டம் முடிந்ததும் மாலை 6 மணிக்கு வேலூர் மண்டி தெருவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் வாக்கு சேகரித்து பேசுகிறார்.
2 பொதுக்கூட்டத்துக்கு செல்லும் வழிகளில் கூடி நிற்கும் பொது மக்களை பார்த்தும் எடப்பாடி பழனிசாமி ஓட்டு கேட்கிறார்.
எடப்பாடி பழனிசாமி வருகையொட்டி அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி செல்லும் வழி நெடுகிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு 5-ந் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தல் பிரசாரம் நாளை சனிக்கிழமை மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இதனால் தலைவர்கள் உச்சகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் ஏற்கனவே முதல் கட்ட தேர்தல் பிரசாரம் செய்திருந்தனர்.
2-வது கட்டமாக நேற்று ஓ.பன்னீர்செல்வம் ஆலங்காயம், ஆம்பூரில் பிரசாரம் செய்தார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று 2-வது கட்டமாக மீண்டும் வேலூர் தொகுதியில் பிரசாரம் செய்கிறார். இன்று மாலை 5 மணிக்கு அணைக்கட்டு பஸ்நிலையத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
இந்த கூட்டம் முடிந்ததும் மாலை 6 மணிக்கு வேலூர் மண்டி தெருவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் வாக்கு சேகரித்து பேசுகிறார்.
2 பொதுக்கூட்டத்துக்கு செல்லும் வழிகளில் கூடி நிற்கும் பொது மக்களை பார்த்தும் எடப்பாடி பழனிசாமி ஓட்டு கேட்கிறார்.
எடப்பாடி பழனிசாமி வருகையொட்டி அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி செல்லும் வழி நெடுகிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.