தமிழ்நாடு

காவல் துறை சுதந்திரமாக விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும்: செல்வப்பெருந்தகை

Published On 2024-05-04 07:39 GMT   |   Update On 2024-05-04 10:59 GMT
  • ராகுல் காந்தி நெல்லை வந்தபோது தேர்தல் பணிகளில் ஜெயக்குமார் தீவிரமாக இருந்தார்.
  • கட்சி ரீதியாகவும் இது தொடர்பாக விசாரணை நடத்துவோம்.

சென்னை:

2 நாட்களாக மாயமான நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

ஜெயக்குமார் உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்டப்பட்டதையடுத்து இந்த வழக்கு விசாரணைக்காக 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது:

* நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தன்னை கட்சிக்காக அர்ப்பணித்துக்கொண்டவர்.

* ராகுல் காந்தி நெல்லை வந்தபோது தேர்தல் பணிகளில் ஜெயக்குமார் தீவிரமாக இருந்தார்.

* நெல்லை மாவட்ட காவல்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினேன்.

* காவல் துறை சுதந்திரமாக விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும்.

* கட்சி ரீதியாகவும் இது தொடர்பாக விசாரணை நடத்துவோம் என்று கூறினார்.

இதனிடையே தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நெல்லை விரைகிறார்.

Tags:    

Similar News