இந்தியா

மகாராஷ்டிராவில் 2 பழங்குடியின பெண் உயிரோடு எரித்துக்கொலை

Published On 2024-05-04 07:13 GMT   |   Update On 2024-05-04 07:13 GMT
  • மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதியாகும்.
  • 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

மராட்டிய மாநிலத்தில் கட்சிரோலி என்ற பகுதி இருக்கிறது. இது மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதியாகும். இங்குள்ள பர்சேவாடா குக்கிராமத்தில் பழங்குடியின பெண்கள் 2 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர்.

ஜம்னி தெலமி (வயது 52), தேவு அட்லமி (57) ஆகிய 2 பேரும் மாந்தீரிகம் செய்வதாக அந்த கிராம பஞ்சாயத்தில் அறிவிக்கப்பட்டனர்.

இதை தொடர்ந்து 2 பெண்களும் 3 மணி நேரம் சித்ரவதை செய்யப்பட்டு 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு காட்டுக்குள் இழுத்து செல்லப்பட்டு உயிரோடு எரித்து கொல்லப்பட்டனர்.

இது தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் உயிரோடு எரிக்கப்பட்ட பெண்ணான ஜம்னி தெலமி கணவர் திவாகர் மகன் தேவாஜி ஆகியோரும் அடங்குவர்.

Tags:    

Similar News