செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

வேலூரில் 3 நாட்கள் பிரசாரம் செய்யும் முதலமைச்சர் பழனிசாமி

Published On 2019-07-25 11:25 GMT   |   Update On 2019-07-25 11:25 GMT
வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 3 நாட்கள் பிரசாரம் செய்ய உள்ளார்.
வேலூர்:

வேலூர் பாராளுமன்ற தேர்தல் வருகிற 5-ந் தேதி நடக்கிறது. இதில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி ஆகியோருக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

 அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட தமிழகம் முழுவதும் இருந்து கட்சியினர் ஆம்பூர், வாணியம்பாடி, குடியாத்தம், கே.வி.குப்பம், அணைக்கட்டு, வேலூர் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.



இந்நிலையில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 27, 28 மற்றும் ஆகஸ்ட் 2 -ம் தேதி என 3 நாள் பிரசாரம் செய்ய உள்ளார்.

வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாணியம்படி, ஆம்பூர், கீழ்வைத்தியணான்குப்பம், குடியாத்தம் அணைக்கட்டு வேலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பிரசாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம் தொடங்கும் 27-ந்தேதி கதிர் ஆனந்தை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் பிரசாரம் மேற்கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது. 
Tags:    

Similar News