இந்தியா

புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி. வரி வசூல்- ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி

Published On 2024-05-01 07:34 GMT   |   Update On 2024-05-01 07:34 GMT
  • உள்நாட்டு வர்த்தகம் அதிகரிப்பே ஜி.எஸ்.டி. வரி வசூல் அதிகரிக்க காரணம் என்று கூறப்படுகிறது.
  • தமிழ்நாட்டில் ஏப்ரல் மாத ஜி.எஸ்.டி. ரூ.12,210 கோடியாக உயர்ந்துள்ளது.

புதுடெல்லி:

ஏப்ரல் மாதத்தில் ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.2.10 லட்சம் கோடி என்ற புதிய உச்சத்தை தொட்டது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தை விட இந்த வருடம் ஜி.எஸ்.டி. வரி வசூல் 12.4 சதவீதம் அதிகரித்துள்ளது. உள்நாட்டு வர்த்தகம் அதிகரிப்பே ஜி.எஸ்.டி. வரி வசூல் அதிகரிக்க காரணம் என்று கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் ஏப்ரல் மாத ஜி.எஸ்.டி. ரூ.12,210 கோடியாக உயர்ந்துள்ளது. 2023 ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது ஜி.எஸ்.டி. வசூல் 6 சதவீதம் அதிகமாகும்.

Tags:    

Similar News