என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் கத்தியுடன் திரிந்த மர்ம மனிதனை சுட்டுப் பிடித்த போலீசார்
Byமாலை மலர்16 Dec 2017 3:22 AM GMT (Updated: 16 Dec 2017 3:22 AM GMT)
நெதர்லாந்தின் தலைநகரில் உள்ள ஆம்ஸ்டர்டாம் ஸ்கைபோல் விமான நிலையத்தில் கத்தியுடன் திரிந்த மர்ம மனிதரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
ஆம்ஸ்டர்டாம்:
ஐரோப்பிய நாடுகளில் சமீப காலமாக துப்பாக்கியால் சுடுதல், லாரியை பொதுமக்கள் மீது மோதச் செய்து விபத்து ஏற்படுத்துதல், கத்தியால் தாக்குதல் போன்ற சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இதனால் விமான நிலையம், ஷாப்பிங் மால் போன்ற இடங்களில் போலீசார் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.
இந்நிலையில், நெதர்லாந்தின் தலைநகரில் உள்ள ஆம்ஸ்டர்டாம் ஸ்கைபோல் விமான நிலையத்தின் சென்ட்ரல் பிளாசா பகுதியில் மர்ம மனிதன் ஒருவர் கத்தியை வைத்துக் கொண்டு மிரட்டும் வகையில் சுற்றித் திரிந்துள்ளார். இதனைக் கண்ட பாதுகாப்பு போலீசார், அவன் பொதுமக்கள் மீது தாக்குதல் ஏற்படுத்தி விடக்கூடாது எனக்கருதி துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவன் படுகாயம் அடைந்தான்.
காயம் அடைந்த அவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் நடைபெற்ற உடனே அப்பகுதியில் மக்கள் நடமாட தடைவிதிக்கப்பட்டது. உனடியாக உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் விமான போக்குவரத்து வழக்கமாக இயங்க அனுமதி அளித்தனர்.
இதுகுறித்து போலீசார் ‘‘சுட்டுவீழ்த்தப்பட்டவன் ஏற்கனவே, வன்முறை குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டவன்’’ எனத் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X