என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆஸ்திரியாவில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
Byமாலை மலர்6 Dec 2017 5:15 AM GMT (Updated: 6 Dec 2017 5:15 AM GMT)
ஆஸ்திரியாவில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் செய்ய சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியதை அடுத்து சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டு 2019 முதல் அமலுக்கு வருகிறது.
வியன்னா:
ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் கடந்த 2009-ம் ஆண்டு ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் அதற்கு தடை விதிக்கப்பட்டது.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் ஓரின சேர்க்கை ஜோடி ஆஸ்திரியாவின் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கோர்ட்டு ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் செய்ய அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டது.
ஆஸ்திரிய பாராளுமன்றத்தில் சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்ட பிறகு 2019 முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது.
உலகிலேயே நெதர்லாந்தில் தான் கடந்த 2001-ம் ஆண்டு ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு அனுமதி அளித்தது. அதை தொடர்ந்து பெல்ஜியம், பிரான்ஸ், இங்கிலாந்து, அயர்லாந்து, ஜெர்மனி, ஹங்கேரி, இத்தாலி உள்ளிட்ட 15 ஐரோப்பிய நாடுகளில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு அனுமதி வழங்கின.
அதை முன்னுதாரணம் காட்டி ஆஸ்திரியாவிலும் இத்தகைய திருமணத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது. அதே நேரத்தில் முன்னாள் கம்யூனிச ஐரோப்பிய நாடுகளான பல்கேரியா, போலந்து, ருமேனியா, சுலோவாக்கியா உள்ளிட்ட நாடுகள் அனுமதி அளிக்கவில்லை.
ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் கடந்த 2009-ம் ஆண்டு ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் அதற்கு தடை விதிக்கப்பட்டது.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் ஓரின சேர்க்கை ஜோடி ஆஸ்திரியாவின் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கோர்ட்டு ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் செய்ய அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டது.
ஆஸ்திரிய பாராளுமன்றத்தில் சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்ட பிறகு 2019 முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது.
உலகிலேயே நெதர்லாந்தில் தான் கடந்த 2001-ம் ஆண்டு ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு அனுமதி அளித்தது. அதை தொடர்ந்து பெல்ஜியம், பிரான்ஸ், இங்கிலாந்து, அயர்லாந்து, ஜெர்மனி, ஹங்கேரி, இத்தாலி உள்ளிட்ட 15 ஐரோப்பிய நாடுகளில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு அனுமதி வழங்கின.
அதை முன்னுதாரணம் காட்டி ஆஸ்திரியாவிலும் இத்தகைய திருமணத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது. அதே நேரத்தில் முன்னாள் கம்யூனிச ஐரோப்பிய நாடுகளான பல்கேரியா, போலந்து, ருமேனியா, சுலோவாக்கியா உள்ளிட்ட நாடுகள் அனுமதி அளிக்கவில்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X