என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜப்பான் பிரதமராக மீண்டும் ஷின்சோ அபே தேர்வு
Byமாலை மலர்1 Nov 2017 6:43 AM GMT (Updated: 1 Nov 2017 6:43 AM GMT)
ஜப்பானில் நடைபெற்ற பாராளூமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற சுதந்திர ஜனநாயக கட்சி தலைமையிலான கூட்டணியின் ஷின்சோ அபே மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
டோக்கியோ:
ஜப்பானில் முன்கூட்டியே தேர்தலை நடத்த திட்டமிட்ட பிரதமர் ஷின்சோ அபே, கடந்த செப்டம்பர் 28-ம் தேதி பாராளுமன்றத்தை (பிரதிநிதிகள் சபை) கலைத்து உத்தரவிட்டார். இதையடுத்து, பிரதிநிதிகள் சபைக்கான தேர்தல் கடந்த அக்டோபர் 22-ம் தேதி நடைபெற்றது. மொத்தமுள்ள 465 இடங்களில் சுமார் 1,200 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்நிலையில், பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில், மொத்தமுள்ள 465 இடங்களில் ஷின்சோ அபேயின் சுதந்திர ஜனநாயக கட்சி தலைமையிலான கூட்டணி 312 இடங்களை கைப்பற்றியது. மூன்றில் இரண்டு பங்கு இடம் கிடைத்துள்ளது என்பதால் சுதந்திர ஜனநாயக கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கிறது.
இதையடுத்து சுதந்திர ஜனநாயக கட்சியை சேர்ந்த ஷின்சோ அபே (63) மீண்டும் பிரதமராக இன்று தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 2012-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து பிரதமராக பதவிவகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X