என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
இங்கிலாந்தில் குடிபோதையில் மிதந்த பேராசிரியை விமானத்தில் இருந்து வெளியேற்றம்
லண்டன்:
இங்கிலாந்தை சேர்ந்தவர் மேக்னாகுமார் (30). இவர் கென்சிங்டனில் உள்ள துர்காம் பல்கலைக்கழகத்தில் சட்டதுறையில் பேராசிரியை ஆக பணி புரிகிறார். இவர் லண்டனில் இருந்து கனடாவில் உள்ள மாண்ட் ரிடியல் நகருக்கு பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமானம் மூலம் புறப்பட்டார்.
விமானம் ஹீத்ரூவில் இருந்து புறப்பட்டது. உடனே இருக்கையில் அமர்ந்திருந்த பேராசிரியை மேக்னாகுமார் திடீரென கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டார். உடனே அவரை விமான பணிப் பெண்களும் ஊழியர்களும் சமாதானம் செய்ய முயன்றனர். அப்போது அவர் அளவுக்கு மீறிய குடிபோதையில் இருந்தார்.
அது குறித்த தகவல் விமானிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து மீண்டும் விமானம் லண்டன் ஹீத்ரூவில் தரை இறக்கப்பட்டது. உடனே அவரை விமானத்தில் இருந்து வெளியேறும்படி ஊழியர்கள் கேட்டுக் கொண்டனர்.
ஆனால் அவர் மறுத்து சீட் பெல்ட்டுடன் இருந்தார். பின்னர் கைது செய்யப்பட்டு கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்டார். அவருக்கு ரூ.3 லட்சம் அபராதமும், 2 ஆண்டுகள் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்ய தடையும் விதிக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்