என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தானில் நாளை சுதந்திர தின விழா : ஏற்பாடுகள் தீவிரம்
Byமாலை மலர்13 Aug 2017 1:37 PM GMT (Updated: 13 Aug 2017 1:37 PM GMT)
பாகிஸ்தானில் நாளை நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவுக்கான ஏற்பாடுகளில் அந்நாட்டு அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் நாட்டின் 70-வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ராணுவத்தினரும், போலீசாரும் தொடர்ந்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.
சுதந்திர தினத்தையொட்டி, இஸ்லாமாத்தில் உள்ள பாத்திமா ஜின்னா பூங்கா மற்றும் கராச்சி கடற்கரை பகுதிகளில் பாகிஸ்தான் விமானப்படையின் கண்கவர் வண்ண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள பாகிஸ்தான் சுதந்திர தினவிழாவில் சிறப்பு விருந்தினராக சீனாவின் துணை பிரதமர் வாங் யாங் கலந்து கொள்கிறார். இதற்காக இன்று பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர், இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X