search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தானில் நாளை சுதந்திர தின விழா : ஏற்பாடுகள் தீவிரம்
    X

    பாகிஸ்தானில் நாளை சுதந்திர தின விழா : ஏற்பாடுகள் தீவிரம்

    பாகிஸ்தானில் நாளை நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவுக்கான ஏற்பாடுகளில் அந்நாட்டு அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாட்டின் 70-வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ராணுவத்தினரும், போலீசாரும் தொடர்ந்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.

    சுதந்திர தினத்தையொட்டி, இஸ்லாமாத்தில் உள்ள பாத்திமா ஜின்னா பூங்கா மற்றும் கராச்சி கடற்கரை பகுதிகளில் பாகிஸ்தான் விமானப்படையின் கண்கவர் வண்ண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த ஆண்டு நடைபெறவுள்ள பாகிஸ்தான் சுதந்திர தினவிழாவில் சிறப்பு விருந்தினராக சீனாவின் துணை பிரதமர் வாங் யாங் கலந்து கொள்கிறார். இதற்காக இன்று பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர், இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×