search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்.கே.நகரில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 3-வது நாளாக பிரசாரம்
    X

    ஆர்.கே.நகரில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 3-வது நாளாக பிரசாரம்

    ஆர்.கே.நகரில் அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 3-வது நாளாக பிரசாரம் செய்கிறார்.

    ராயபுரம்:

    ஆர்.கே.நகரில் அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

    இருவரும் தங்களது 2-ம் கட்ட பிரசாரத்தை கடந்த 9-ந்தேதி தண்டையார்பேட்டையில் தொடங்கினார்கள்.

    நேற்று அம்மினியம்மாள் தோட்டம், ஜீவா நகர், சிவன் நகர், அரசு அச்சக குடியிருப்பு பகுதிகளில் பிரசாரம் செய்தார்கள். அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, தங்கமணி ஆகியோர் வரவேற்றார்கள்.

    3-வது நாளான இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கன்னியாகுமரி சென்று விட்டதால் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாக்கு சேகரிக்கிறார்.

    காலையில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன் பொறுப்பில் உள்ள நேதாஜி நகர் 4-வது தெருவில் 29 மற்றும் 31-வது பூத் ஏஜண்டுகளிடம் ஆலோசனை நடத்தினார்.

    மாலையில் பாட நூல் கழக தலைவர் பா.வளர்மதி பொறுப்பு பகுதியான மேயர் பாசுதேவ் தெருவில் வாக்கு சேகரிக்கிறார்.

    இந்த தொகுதியில் மொத்தம் 7 வார்டுகள் உள்ளன. 100-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. ஆயிரம் ஓட்டுகள் என்ற வகையில் பிரித்து அமைச்சர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 30 அமைச்சர்கள் தேர்தல் பணி பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

    30 அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தினமும் தெரு தெருவாக தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×