என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜல்லிக்கட்டு: புதுச்சேரி சட்டசபையில் சட்ட மசோதா நிறைவேறியது
Byமாலை மலர்23 Nov 2017 6:37 AM GMT (Updated: 23 Nov 2017 6:38 AM GMT)
புதுச்சேரியில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வகை செய்யும் சட்ட வரைவு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மீதான நீதிமன்றத் தடைகளை நீக்கி நிரந்தரமாக ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி மாணவர்கள், பொதுமக்கள் தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவசர சட்டம் கொண்டுவரப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. பின்னர் சட்டமன்றத்தில் இதற்காக சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனால் ஜல்லிக்கட்டு மீதான தடை நீங்கியது.
இதேபோல் புதுச்சேரியிலும் ஜல்லிக்கட்டு போட்டிகளை தடையின்றி நடத்த அரசு முயற்சி மேற்கொண்டது. அதன்படி, இன்று புதுச்சேரி சட்டமன்றக் கூட்டம் தொடங்கியதும், ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு, அந்த மசோதாவை அமைச்சர் நமச்சிவாயம் தாக்கல் செய்தார். அது எதிர்ப்பின்றி சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இனி, இந்த சட்ட மசோதா குடியரசு தலைவரின் ஒப்புதலைப் பெற்றதும் சட்ட வடிவம் பெறும்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மீதான நீதிமன்றத் தடைகளை நீக்கி நிரந்தரமாக ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி மாணவர்கள், பொதுமக்கள் தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவசர சட்டம் கொண்டுவரப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. பின்னர் சட்டமன்றத்தில் இதற்காக சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனால் ஜல்லிக்கட்டு மீதான தடை நீங்கியது.
இதேபோல் புதுச்சேரியிலும் ஜல்லிக்கட்டு போட்டிகளை தடையின்றி நடத்த அரசு முயற்சி மேற்கொண்டது. அதன்படி, இன்று புதுச்சேரி சட்டமன்றக் கூட்டம் தொடங்கியதும், ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு, அந்த மசோதாவை அமைச்சர் நமச்சிவாயம் தாக்கல் செய்தார். அது எதிர்ப்பின்றி சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இனி, இந்த சட்ட மசோதா குடியரசு தலைவரின் ஒப்புதலைப் பெற்றதும் சட்ட வடிவம் பெறும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X