என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பண்ருட்டியில் மோதல்: விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்கள் 2 பேர் கைது
Byமாலை மலர்21 Nov 2017 4:35 PM GMT (Updated: 21 Nov 2017 4:35 PM GMT)
பண்ருட்டியில் போலீசாரைபணி செய்ய விடாமல் தடுத்து தகராறு செய்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் பண்ருட்டி காந்தி ரோடு வழியாக காரில் வந்து கொண்டு இருந்தார்.
பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வந்தபோது இவரது காருக்கு வழிவிடாமல் தகராறு செய்த வாலிபர்களை காரில் வந்த சிலர் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
அப்போது அந்த வழியாக வந்த பண்ருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டைமன்துரை அவர்களை தட்டி கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்து போலீசாரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பண்ருட்டி போலீசில் சப்-இன்ஸ்பெக்டர் டைமன் துரை கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணுபிரியா ஆகியோர் வழக்கு பதிவு செய்து நெல்லிக்குப்பத்தை அடுத்த சுந்தரவாண்டியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி ஓன்றிய இளைஞரணி செயலாளர் ஸ்ரீபால் (28),மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் மொய்தீன் (32) ஆகியோரை கைது செய்தனர்.
இதற்கிடையே கடலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன், தனது காருக்கு வழிவிடாமல் தகராறில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத மூன்று பேரை கைது செய்ய வேண்டும் என்று பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர், இந்த சம்பவம் தொடர்பாக இன்று (21-ந் தேதி) மாலை பண்ருட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
கடலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் பண்ருட்டி காந்தி ரோடு வழியாக காரில் வந்து கொண்டு இருந்தார்.
பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வந்தபோது இவரது காருக்கு வழிவிடாமல் தகராறு செய்த வாலிபர்களை காரில் வந்த சிலர் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
அப்போது அந்த வழியாக வந்த பண்ருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டைமன்துரை அவர்களை தட்டி கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்து போலீசாரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பண்ருட்டி போலீசில் சப்-இன்ஸ்பெக்டர் டைமன் துரை கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணுபிரியா ஆகியோர் வழக்கு பதிவு செய்து நெல்லிக்குப்பத்தை அடுத்த சுந்தரவாண்டியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி ஓன்றிய இளைஞரணி செயலாளர் ஸ்ரீபால் (28),மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் மொய்தீன் (32) ஆகியோரை கைது செய்தனர்.
இதற்கிடையே கடலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன், தனது காருக்கு வழிவிடாமல் தகராறில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத மூன்று பேரை கைது செய்ய வேண்டும் என்று பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர், இந்த சம்பவம் தொடர்பாக இன்று (21-ந் தேதி) மாலை பண்ருட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X