search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீ வைத்து எரிக்கப்பட்ட மாணவனை சிகிச்சைக்காக ஆம்புலன்சில் கொண்டு சென்ற காட்சி.
    X
    தீ வைத்து எரிக்கப்பட்ட மாணவனை சிகிச்சைக்காக ஆம்புலன்சில் கொண்டு சென்ற காட்சி.

    திருப்பத்தூர் அருகே பள்ளி மாணவனை கடத்தி பெட்ரோல் ஊற்றி எரிப்பு

    திருப்பத்தூர் அருகே பள்ளி மாணவனை கடத்தி பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருப்பத்தூர்:

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா ஜோன்றம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். கூலி தொழிலாளி. இவரது மகன் கோவிந்தன் (வயது13).

    திருப்பத்தூர் வெங்களா புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். தினமும் பள்ளிக்கு சைக்கிளில் சென்று வந்தார். இன்று காலை வழக்கம் போல பள்ளிக்கு சென்று கொண்டி ருந்தார்.

    நேதாஜிநகர் என்ற இடத்தில் வந்தபோது அவரை 2 பேர் மடக்கினர். கோவிந்தனை குண்டு கட்டாக தூக்கி அருகே இருந்த மாந்தோப்புக்குக்குள் சென்றனர்.

    கோவிந்தனை தாக்கி தரையில் சாய்த்தனர். மேலும் பெட்ரோலை அவரது உடலில் ஊற்றி தீவைத்தனர். உடல் முழுவதும் தீ பரவியதால் கோவிந்தன் வலியால் துடித்து கூச்சலிட்டார். அவனது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் ஓடி வந்தனர். இதனைக் கண்ட மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

    பொதுமக்கள் 108 ஆம்புலன்சு வரவழைத்தனர். மாணவனை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    பள்ளி மாணவன் உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பத்தூர் தாலுகா போலீசார் மாணவன் எரிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    மாணவன் உயிரோடு எரிக்கப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. முன்விரோத தகராறில் எரிக்கப்பட்டாரா? அல்லது பள்ளியில் வேறு ஏதாவது தகராறு காரணமாக இந்த சம்பவம் நடந்ததா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அவர்கள் பிடிபட்டால் திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என போலீசார் தெரிவித்தனர்.



    Next Story
    ×