என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அண்ணா மேம்பாலம் அருகே தறிகெட்டு ஓடிய சொகுசு கார் மோதி ஆட்டோ டிரைவர் பலி
Byமாலை மலர்12 Nov 2017 9:59 AM GMT (Updated: 12 Nov 2017 9:59 AM GMT)
அண்ணா மேம்பாலம் அருகே சொகுசு கார் மோதி ஆட்டோ டிரைவர் ஒருவர் பலியானார். இந்த சம்பவம் குறித்து குடிபோதையில் இருந்த 4 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னை:
சென்னை அண்ணா மேம்பாலம் அருகே கதீட்ரல் சாலை ஓரத்தில் இரவு நேரத்தில் ஆட்டோ டிரைவர்கள் ஆட்டோவை நிறுத்திவிட்டு அதில் தூங்குவது வழக்கம். நேற்று இரவும் சில ஆட்டோ டிரைவர்கள் ஆட்டோவை நிறுத்திவிட்டு தூங்கிக் கொண்டிருந்தனர்.
நள்ளிரவு 1 மணியளவில் சொகுசு கார் ஒன்று அந்த வழியாக வேகமாக வந்தது. அதில் 5 பேர் குடிபோதையில் இருந்தனர். திடீரென்று அந்த கார் தறிகெட்டு ஓடி சாலை ஓரம் நிறுத்தியிருந்த ஆட்டோக்கள் மீது மோதியது. இதில் அனைத்து ஆட்டோக்களும் நொறுங்கின.
ஆட்டோவில் தூங்கிக் கொண்டிருந்த ராஜேஷ் (38) என்ற ஆட்டோ டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 5 ஆட்டோ டிரைவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக சாஸ்திரிநகர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். சொகுசு காரில் இருந்த 4 பேரை கைது செய்தனர். அவர்கள் மாணவர்கள் என்று தெரியவந்துள்ளது.
அந்த காரை முக்கிய பிரமுகர் ஒருவரின் மகன் ஒட்டி வந்ததாக தெரிகிறது. அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
சென்னை அண்ணா மேம்பாலம் அருகே கதீட்ரல் சாலை ஓரத்தில் இரவு நேரத்தில் ஆட்டோ டிரைவர்கள் ஆட்டோவை நிறுத்திவிட்டு அதில் தூங்குவது வழக்கம். நேற்று இரவும் சில ஆட்டோ டிரைவர்கள் ஆட்டோவை நிறுத்திவிட்டு தூங்கிக் கொண்டிருந்தனர்.
நள்ளிரவு 1 மணியளவில் சொகுசு கார் ஒன்று அந்த வழியாக வேகமாக வந்தது. அதில் 5 பேர் குடிபோதையில் இருந்தனர். திடீரென்று அந்த கார் தறிகெட்டு ஓடி சாலை ஓரம் நிறுத்தியிருந்த ஆட்டோக்கள் மீது மோதியது. இதில் அனைத்து ஆட்டோக்களும் நொறுங்கின.
ஆட்டோவில் தூங்கிக் கொண்டிருந்த ராஜேஷ் (38) என்ற ஆட்டோ டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 5 ஆட்டோ டிரைவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக சாஸ்திரிநகர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். சொகுசு காரில் இருந்த 4 பேரை கைது செய்தனர். அவர்கள் மாணவர்கள் என்று தெரியவந்துள்ளது.
அந்த காரை முக்கிய பிரமுகர் ஒருவரின் மகன் ஒட்டி வந்ததாக தெரிகிறது. அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X