search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்அழகன், பவுல்ராஜ்
    X
    தமிழ்அழகன், பவுல்ராஜ்

    காஞ்சீபுரம் அருகே பாலாற்று வெள்ளத்தில் சிக்கி 2 மாணவர்கள் பலி

    ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழையினால் காஞ்சீபுரம் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ஆபத்தை உணராமல் பாலாற்றில் குளித்த 2 மாணவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    காஞ்சீபுரம்:

    ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழையினால் காஞ்சீபுரம் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ஆபத்தை உணராமல் பாலாற்றில் குளித்த 2 மாணவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    காஞ்சீபுரம், திருக்காளி மேடு, எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் தமிழ் அழகன் (20). கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று மாலை அவர் நண்பர்களுடன் பாலாற்றில் குளித்தார். அப்போது தமிழ்அழகன் புதை மணலில் சிக்கி தண்ணீரில் மூழ்கினார். நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. சிறிது நேரத்தில் தமிழ் அழகன் பலியானார். தீயணைப்பு துறையினர் புதை மணலில் சிக்கி இருந்த தமிழ்அழகன் உடலை மீட்டனர்.

    இது குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச் செல்வன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    திருக்கழுக்குன்றம் ஊராட்சிக்குட்பட்ட ஆனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் பவுல்ராஜ் (13). 8ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நண்பர்களுடன் அப்பகுதி பாலாற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார். தீயணைப்பு துறையினர் 1 மணி நேரம் போராடி பவுல்ராஜின் உடலை மீட்டனர். இது குறித்து திருக்கழுகுன்றம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
    Next Story
    ×