என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்துக்கு தைரியமான அரசியல்வாதி தேவை: சசிகலா புஷ்பா எம்.பி. பேட்டி
Byமாலை மலர்25 Sep 2017 4:47 AM GMT (Updated: 25 Sep 2017 4:47 AM GMT)
மக்களைப்பற்றி யாரும் சிந்திக்கவில்லை. தமிழகத்திற்கு தைரியமான அரசியல்வாதி தேவை என்று மதுரை விமான நிலையத்தில் சசிகலா புஷ்பா எம்.பி நிருபர்களிடம் கூறினார்.
அவனியாபுரம்:
மதுரை விமான நிலையத்தில் சசிகலா புஷ்பா எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் சி.பி.ஐ. விசாரணை தேவை. ஜெயலலிதாவை ஒரு குடும்பம் கொலை செய்ததாக கூறுகிறார்கள். முதல்வர் அமைக்கும் விசாரணை கமிஷன் தீர்ப்பு வந்தால் தான் முடிவு தெரியும்.
தமிழ்நாட்டிற்கு நல்லது செய்த பெண்ணின் மரணத்தில் உள்ள மர்மம் அகல வேண்டும். ஒருவர் 1 வாரம் நல்லவராக தெரிகிறார். அடுத்த வாரம் அவர் நிலை மாறுகிறார். மக்களுக்காக போராடும் அரசியல்வாதிகள் இங்கு இல்லை.
முன்னாள் முதல்வரோ, இந்நாள் முதல்வரோ, அமைச்சர்களோ சுயநலமாக செயல்படுகின்றனர். பதவியை தக்கவைக்க போராடுகின்றனர்.
பொதுக்குழுவில் தினகரனை தரக்குறைவாக முதல்வர் பேசியிருக்கக் கூடாது. மாமியார் வீட்டுக்கு செல்வாய் என கூறியது தவறு.
தினகரன் அரசியலில் எந்த பிரச்சினையையும் சமாளிக்கக்கூடிய திறன் கொண்டவராக உள்ளார். பதவிக்காக ஓ.பன்னீர் செல்வம் ஒரு வாரம் நல்லவராக தெரிகிறார். அடுத்த வாரம் அவரின் சுயரூபம் தெரிகிறது.
அவரவர் உரிமைக்காக போராடுகின்றனர். மக்களைப்பற்றி யாரும் சிந்திக்கவில்லை. தமிழகத்திற்கு தைரியமான அரசியல்வாதி தேவை.
இவ்வாறு அவர் கூறினார்.
மதுரை விமான நிலையத்தில் சசிகலா புஷ்பா எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் சி.பி.ஐ. விசாரணை தேவை. ஜெயலலிதாவை ஒரு குடும்பம் கொலை செய்ததாக கூறுகிறார்கள். முதல்வர் அமைக்கும் விசாரணை கமிஷன் தீர்ப்பு வந்தால் தான் முடிவு தெரியும்.
தமிழ்நாட்டிற்கு நல்லது செய்த பெண்ணின் மரணத்தில் உள்ள மர்மம் அகல வேண்டும். ஒருவர் 1 வாரம் நல்லவராக தெரிகிறார். அடுத்த வாரம் அவர் நிலை மாறுகிறார். மக்களுக்காக போராடும் அரசியல்வாதிகள் இங்கு இல்லை.
முன்னாள் முதல்வரோ, இந்நாள் முதல்வரோ, அமைச்சர்களோ சுயநலமாக செயல்படுகின்றனர். பதவியை தக்கவைக்க போராடுகின்றனர்.
பொதுக்குழுவில் தினகரனை தரக்குறைவாக முதல்வர் பேசியிருக்கக் கூடாது. மாமியார் வீட்டுக்கு செல்வாய் என கூறியது தவறு.
தினகரன் அரசியலில் எந்த பிரச்சினையையும் சமாளிக்கக்கூடிய திறன் கொண்டவராக உள்ளார். பதவிக்காக ஓ.பன்னீர் செல்வம் ஒரு வாரம் நல்லவராக தெரிகிறார். அடுத்த வாரம் அவரின் சுயரூபம் தெரிகிறது.
அவரவர் உரிமைக்காக போராடுகின்றனர். மக்களைப்பற்றி யாரும் சிந்திக்கவில்லை. தமிழகத்திற்கு தைரியமான அரசியல்வாதி தேவை.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X