search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கல்லூரி மாணவியை ஏமாற்றி உல்லாசம்: கருவை கலைத்த காதலன் கைது
    X

    கல்லூரி மாணவியை ஏமாற்றி உல்லாசம்: கருவை கலைத்த காதலன் கைது

    திருவண்ணாமலையில் கல்லூரி மாணவியிடம் உல்லாசம் அனுபவித்து, கருவை கலைத்த காதலன் கைது செய்யப்பட்டார்.

    திருவண்ணாமலை:

    திருக்கோவிலூர் அருகே உள்ள பாசர்புரம் கிராமத்தை சேர்ந்தவர் 23 வயதுடைய மாணவி. இவர், வேட்டவலத்தில் உள்ள தனது அக்காள் வீட்டில் தங்கி திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் எம்.ஏ. 2-ம் ஆண்டு முதுநிலை பட்டப்படிப்பு படிக்கிறார்.

    இந்த நிலையில், அவரது அக்காள் கணவரின் தம்பி செந்தமிழ் செல்வன் (27) என்ற வாலிபர், ஒரு நாள் இரவில் வீட்டில் உள்ள ஒரு அறையில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த மாணவியை, வலுகட்டாயமாக திருமண ஆசை காட்டி உல்லாசம் அனுபவித்துள்ளார்.

    இதையடுத்து, காதலிப்பதாக ஆசை காட்டி அடிக்கடி மாணவியுடன் உல்லாசம் அனுபவித்தார். இந்த நிலையில், மாணவி கர்ப்பமடைந்தார். தன்னை திருமணம் செய்யுமாறு மாணவி வற்புறுத்தினார். ஆனால், திருமணத்திற்கு செந்தமிழ் செல்வன் மறுப்பு தெரிவித்தார்.

    சில நாட்கள் போகட்டும் என்றுக்கூறி மாத்திரை மூலம் கருவை கலைத்துள்ளார். இதுகுறித்து, திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அந்த மாணவி புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து செந்தமிழ் செல்வனை இன்று காலை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×