என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கல்லூரி மாணவியை ஏமாற்றி உல்லாசம்: கருவை கலைத்த காதலன் கைது
திருவண்ணாமலை:
திருக்கோவிலூர் அருகே உள்ள பாசர்புரம் கிராமத்தை சேர்ந்தவர் 23 வயதுடைய மாணவி. இவர், வேட்டவலத்தில் உள்ள தனது அக்காள் வீட்டில் தங்கி திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் எம்.ஏ. 2-ம் ஆண்டு முதுநிலை பட்டப்படிப்பு படிக்கிறார்.
இந்த நிலையில், அவரது அக்காள் கணவரின் தம்பி செந்தமிழ் செல்வன் (27) என்ற வாலிபர், ஒரு நாள் இரவில் வீட்டில் உள்ள ஒரு அறையில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த மாணவியை, வலுகட்டாயமாக திருமண ஆசை காட்டி உல்லாசம் அனுபவித்துள்ளார்.
இதையடுத்து, காதலிப்பதாக ஆசை காட்டி அடிக்கடி மாணவியுடன் உல்லாசம் அனுபவித்தார். இந்த நிலையில், மாணவி கர்ப்பமடைந்தார். தன்னை திருமணம் செய்யுமாறு மாணவி வற்புறுத்தினார். ஆனால், திருமணத்திற்கு செந்தமிழ் செல்வன் மறுப்பு தெரிவித்தார்.
சில நாட்கள் போகட்டும் என்றுக்கூறி மாத்திரை மூலம் கருவை கலைத்துள்ளார். இதுகுறித்து, திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அந்த மாணவி புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து செந்தமிழ் செல்வனை இன்று காலை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்