search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மூளைச்சாவு அடைந்த பீட்டர் சபரிராஜ்.
    X
    மூளைச்சாவு அடைந்த பீட்டர் சபரிராஜ்.

    ஓட்டப்பிடாரம்: விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த வியாபாரி உடல் உறுப்பு தானம்

    ஓட்டப்பிடாரம் அருகே விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த வியாபாரி சபரிராஜின் கண்கள், சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
    ஓட்டப்பிடாரம்:

    ஓட்டப்பிடாரம் மெயின் பஜார் வீதியை சேர்ந்தவர் பீட்டர் சபரிராஜ் (வயது56). இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். கடந்த 15-ந்தேதி மோட்டார் சைக்கிளில் பீட்டர் சபரிராஜ் வேலாயுதபுரம் அருகே சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியதில் பீட்டர் சபரிராஜ் படுகாயம் அடைந்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு தூத்துக்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பீட்டர் சபரிராஜ் மூளைச்சாவு அடைந்து விட்டதாக கூறினர். இதையடுத்து அவரது மகன் ஜான்சன் தனது தந்தையின் உடலை உடலுறுப்பு தானம் செய்ய டாக்டர்களிடம் விருப்பம் தெரிவித்தார். பீட்டர் சபரிராஜின் கண்கள், சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளை டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் எடுத்தனர்.
    Next Story
    ×