என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஓட்டப்பிடாரம்: விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த வியாபாரி உடல் உறுப்பு தானம்
Byமாலை மலர்18 Sep 2017 10:17 AM GMT (Updated: 18 Sep 2017 10:17 AM GMT)
ஓட்டப்பிடாரம் அருகே விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த வியாபாரி சபரிராஜின் கண்கள், சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் மெயின் பஜார் வீதியை சேர்ந்தவர் பீட்டர் சபரிராஜ் (வயது56). இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். கடந்த 15-ந்தேதி மோட்டார் சைக்கிளில் பீட்டர் சபரிராஜ் வேலாயுதபுரம் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியதில் பீட்டர் சபரிராஜ் படுகாயம் அடைந்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு தூத்துக்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பீட்டர் சபரிராஜ் மூளைச்சாவு அடைந்து விட்டதாக கூறினர். இதையடுத்து அவரது மகன் ஜான்சன் தனது தந்தையின் உடலை உடலுறுப்பு தானம் செய்ய டாக்டர்களிடம் விருப்பம் தெரிவித்தார். பீட்டர் சபரிராஜின் கண்கள், சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளை டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் எடுத்தனர்.
ஓட்டப்பிடாரம் மெயின் பஜார் வீதியை சேர்ந்தவர் பீட்டர் சபரிராஜ் (வயது56). இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். கடந்த 15-ந்தேதி மோட்டார் சைக்கிளில் பீட்டர் சபரிராஜ் வேலாயுதபுரம் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியதில் பீட்டர் சபரிராஜ் படுகாயம் அடைந்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு தூத்துக்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பீட்டர் சபரிராஜ் மூளைச்சாவு அடைந்து விட்டதாக கூறினர். இதையடுத்து அவரது மகன் ஜான்சன் தனது தந்தையின் உடலை உடலுறுப்பு தானம் செய்ய டாக்டர்களிடம் விருப்பம் தெரிவித்தார். பீட்டர் சபரிராஜின் கண்கள், சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளை டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் எடுத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X