என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாலில் கலப்படமா?: தமிழகத்தில் இருந்து செல்லும் லாரிகளில் கேரள அதிகாரிகள் சோதனை
Byமாலை மலர்30 Aug 2017 10:15 AM GMT (Updated: 30 Aug 2017 10:15 AM GMT)
தமிழகத்தில் இருந்து செல்லும் பாலில் கலப்படமா? என கேரள அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
கூடலூர்:
கேரள மக்களின் தேவைக்காக தமிழக பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான லிட்டர் பால் கொண்டு செல்லப்படுகிறது.
இந்த பால் கெடாமல் இருப்பதற்காக பார்மலின் என்ற வேதிப்பொருள் கலக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளது. மேலும் ஜவ்வரிசியை துணியில் கட்டி பாலில் போட்டு வைத்தால் கெட்டியாக மாறி அதிக லிட்டர் தண்ணீர் அதில் கலந்து மோசடி செய்து வருகின்றனர்.
தற்போது கேரளாவில் ஓணம் பண்டிகை களைகட்டி வருகிறது. இதனையொட்டி அதிக அளவு பால் தேவைப்படுவதால் தமிழகத்தில் இருந்து குமுளி, பாலக்காடு, களியக்காவிளை வழியாக கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது.
குமுளி சோதனைச் சாவடியில் பால் கொண்டு செல்லும் லாரிகளை கேரளா உணவு பாதுகாப்பு அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நிறுத்தி அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பால் மாதிரியை சோதனை செய்வதற்காக எல்லைப் பகுதியில் தற்காலிக ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.
பால் வண்டிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் யூரியா, காரம், பாம்லின் உள்ளிட்டவை கலந்துள்ளதா என அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். ஆய்வுக்கு பின்னரே வாகனங்கள் அனைத்தும் கேரள எல்லைக்குள் அனுமதிக்கப்படுகிறது.
இந்த சோதனை 24 மணி நேரமும் நடைபெறும். ஓணம் பண்டிகை முடியும்வரை அதிகாரிகள் இவற்றை தீவிரமாக கண்காணிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மக்களின் தேவைக்காக தமிழக பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான லிட்டர் பால் கொண்டு செல்லப்படுகிறது.
இந்த பால் கெடாமல் இருப்பதற்காக பார்மலின் என்ற வேதிப்பொருள் கலக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளது. மேலும் ஜவ்வரிசியை துணியில் கட்டி பாலில் போட்டு வைத்தால் கெட்டியாக மாறி அதிக லிட்டர் தண்ணீர் அதில் கலந்து மோசடி செய்து வருகின்றனர்.
தற்போது கேரளாவில் ஓணம் பண்டிகை களைகட்டி வருகிறது. இதனையொட்டி அதிக அளவு பால் தேவைப்படுவதால் தமிழகத்தில் இருந்து குமுளி, பாலக்காடு, களியக்காவிளை வழியாக கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது.
குமுளி சோதனைச் சாவடியில் பால் கொண்டு செல்லும் லாரிகளை கேரளா உணவு பாதுகாப்பு அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நிறுத்தி அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பால் மாதிரியை சோதனை செய்வதற்காக எல்லைப் பகுதியில் தற்காலிக ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.
பால் வண்டிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் யூரியா, காரம், பாம்லின் உள்ளிட்டவை கலந்துள்ளதா என அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். ஆய்வுக்கு பின்னரே வாகனங்கள் அனைத்தும் கேரள எல்லைக்குள் அனுமதிக்கப்படுகிறது.
இந்த சோதனை 24 மணி நேரமும் நடைபெறும். ஓணம் பண்டிகை முடியும்வரை அதிகாரிகள் இவற்றை தீவிரமாக கண்காணிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X