என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கவர்னர் அறிவுரைகளை சபாநாயகர் நிறைவேற்றுவார்: செ.கு.தமிழரசன் பேட்டி
வேலூர்:
முல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் கவர்னரை சந்தித்து தனிதனியாக மனு கொடுத்தனர்.
அதில் பொதுசெயலாளர் சசிகலா ஆதரவினால் எடப்பாடி முதல் அமைச்சரானார். தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு மெஜாரிட்டி இல்லை. முதல்-அமைச்சரை மாற்ற வேண்டும் என கூறியிருந்தனர்.
இதனால் சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து முன்னாள் சபாநாயகர் செ.கு.தமிழரசன் கூறியதாவது:-
முதல்-அமைச்சருக்கு 19 எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதால் ஆட்சிக்கு ஆபத்து இல்லை என்று சொல்ல முடியாது. எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் அ.தி.மு.க.வை தவிர வேறு எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை. எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு மட்டுமே தனி பெரும்பான்மை உள்ளது.
19 எம்.எல்.ஏக்கள் கவர்னரிடம் மனு அளித்துள்ளனர். இந்த விவகாரத்தில் கவர்னரின் அறிவுரைகளை சபாநாயகர் நிறைவேற்ற வேண்டும். கவர்னரின் அறிவுரைகளை மட்டுமே சபாநாயகர் செயல்படுத்த முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்