என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பொள்ளாச்சியில் தொழில் அதிபரின் வீட்டின் பூட்டை உடைத்து 46 பவுன் நகை கொள்ளை
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி சக்தி கார்டனை சேர்ந்தவர் கணேஷ் கிருஷ்ணகுமார் (வயது41). இவர் திருப்பூரில் கார்மெண்ட்ஸ் தொழில் செய்து வருகிறார்.
இவரது மனைவி சரண்யா (28). இவர் பொள்ளாச்சி தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். நேற்று கணேஷ்கிருஷ்ணகுமார் தொழில் சம்பந்தமாக வெளியூர் சென்றார். இவரது மனைவி சரண்யாவும் வெளியூர் சென்றார். சரண்யாவின் தம்பி சபரீஷ் மட்டும் வீட்டில் இருந்தார். அவரும் மதியம் வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்றார்.
இந்நிலையில் சரண்யா நேற்று மாலை வீட்டுக்கு வந்து பார்க்கும்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 46 பவுன் நகை மற்றும் ரூ.1.50 லட்சம் பணம் திருடப்பட்டிருந்தது.
இது குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசில் புகார் செய்யப்பட்டது.
தகவலையடுத்து டி.எஸ்.டி. (பொறுப்பு) சுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் சுப்பிரமணிய (பொறுப்பு) மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேப்பாநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்