search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெடுவாசலில் போராடும் மக்களை கண்டுகொள்ளாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து போராட்டம்
    X

    நெடுவாசலில் போராடும் மக்களை கண்டுகொள்ளாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து போராட்டம்

    நெடுவாசலில் போராடும் மக்களை கண்டுகொள்ளாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பொதுமக்கள் மிக்சர் சாப்பிட்டு நேற்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    வடகாடு:

    புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே உள்ள நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதை கண்டித்து, நெடுவாசலில் அப்பகுதி மக்கள் கடந்த ஏப்ரல் மாதம் 12-ந் தேதி 2-ம் கட்டமாக போராட்டத்தை தொடங்கினர். அதில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நூதன போராட்டங்கள் நடத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், நெடுவாசல் நாடியம்மன் கோவில் அருகே 83-வது நாளாக நேற்று நடைபெற்ற போராட்டத்தில், ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கொண்டும், திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள்.

    இதைத்தொடர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் பல மாதங்களாக திட்டத்தை எதிர்த்து போராடி வரும் மக்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மிக்சர் சாப்பிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஹைட்ரோகார்பன் போராட்டக்குழு சார்பில் உயர்மட்டக்குழு அமைத்து போராட்டத்தை முன்னெடுப்பது தொடர்பாக பல முயற்சிகளில் ஈடுபட தொடங்கி உள்ளனர். அதனால், போராட்டம் மேலும் தீவிரமடைய தொடங்கி உள்ளது. நேற்றைய போராட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×