என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மேலூரில் இன்று மஞ்சுவிரட்டு: காளை முட்டியதில் மாடுபிடி வீரர் பலி
மேலூர்:
மதுரை மாவட்டம் மேலூர் யூனியன் அலுவலகம் எதிரே தனியார் இடத்தில் இன்று பா.ஜ.க. இளைஞர் அணி சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது.
மைதானத்தின் நடுவே காளை மாட்டை கயிற்றால் கட்டி விடுவார்கள். அதை 7 பேர் கொண்ட மாடுபிடி வீரர்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் அடக்க வேண்டும்.
காளையை அடக்கும் வீரருக்கு பரிசு வழங்கப்படும். பிடிபடாத மாட்டுக்கு அதன் உரிமையாளருக்கு பரிசு வழங்கப்படும்.
மேலூர் மஞ்சுவிரட்டில் சருகுவலையப்பட்டியை சேர்ந்த அய்யனார் (வயது 27) என்பவர் ஒரு குழுவில் பங்கேற்று காளையை அடக்க முயன்றார்.
எதிர்பாராத விதமாக அய்யனாரின் கழுத்தில் காளை முட்டித்தள்ளியது. இதில் படுகாயம் அடைந்த அவரை மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அய்யனார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்