search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலியா ஓபன்: 3-வது சுற்றில் நடால், டிமித்ரோ, சிலிச் வெற்றி
    X

    ஆஸ்திரேலியா ஓபன்: 3-வது சுற்றில் நடால், டிமித்ரோ, சிலிச் வெற்றி

    ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றி ஆட்டங்களில் முன்னணி வீரர்களான ரபேல் நடால், டிமித்ரோ, மரின் சிலிச் ஆகியோர் வெற்றி பெற்றனர். #Australianopen #tennis #RafaelNadal

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் உள்ள மெல்போர்ன் பூங்கா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்று ஆண்களுக்கான மூன்றாவது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.

    இதில் முதல்நிலை வீரரான ரபேல் நடால், போஸ்னியாவின் டமிர் சூம்ஹரை எதிர்கொண்டார். இப்போட்டியில், அதிரடியாக விளையாடிய நடால் 6-1, 6-3, 6-1 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு மூன்றாவது சுற்று ஆட்டத்தில் மூன்றாம்நிலை வீரரான பல்கேரியாவின் கிரிகார் டிமித்ரோ, ரஷியாவின் அன்ட்ரே ருப்லேவை எதிர்த்து விளையாடினார். இதில், 6-3, 4-6, 6-4, 6-4 என்ற செட்களில் டிமித்ரோ வெற்றி பெற்றார். 


         டிமித்ரோ

    இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு மூன்றாவது சுற்று போட்டியில் ஆறாம்நிலை வீரரான மரின் சிலிச், அமெரிக்காவின் ஹரிசன் ஆகியோர் மோதினர். இப்போட்டியில், 7-6, 6-3, 7-6 என்ற நேர் செட்களில் மரின் சிலிச் வெற்றி பெற்றார். 


    சிமோனா ஹலெப்


    பெண்கள் பிரிவில் நடைபெற்ற இரண்டாவது சுற்று போட்டிகளில் முதல்நிலை வீராங்கனை சிமோனா ஹலெப், கிறிஸ்டினா பிளிஸ்கோவா, முகுருசா, கார்சியா உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர். ஒன்பதாம்நிலை வீராங்கனையான ஜோனா கோண்டா, அமெரிக்காவின் பெராவிடன் 6-4, 7-5 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து வெளியேறினார். #Australianopen #tennis #RafaelNadal #Dimitrov
    Next Story
    ×