search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களுரு எப்.சி.யை வீழ்த்தி 3-வது வெற்றியை பதிவுசெய்தது ஜேம்ஷெத்பூர் எப்.சி.
    X

    ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களுரு எப்.சி.யை வீழ்த்தி 3-வது வெற்றியை பதிவுசெய்தது ஜேம்ஷெத்பூர் எப்.சி.

    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் லீக் போட்டியில் ஜேம்ஷெத்பூர் எப்.சி. அணி, பெங்களுரு எப்.சி.யை 1-0 என வீழ்த்தி வெற்றி பெற்றது.
    பெங்களுரு:

    10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பெங்களுருவில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கிய 29-வது லீக் ஆட்டத்தில் பெங்களுரு எப்.சி,  ஜேம்ஷெத்பூர் எப்.சி. அணியை எதிர்கொண்டது.

    இப்போட்டி தொடங்குவதற்கு முன்னர், பெங்களுரு எப்.சி. அணி இதுவரை விளையாடிய ஏழு போட்டிகளில் நான்கு வெற்றி, மூன்று தோல்வியுடன் இரண்டாவது இடத்தில் இருந்தது. ஜேம்ஷெத்பூர் எப்.சி. அணி இதுவரை விளையாடிய ஆறு போட்டிகளில் இரண்டு வெற்றி, மூன்று டிரா, ஒரு தோல்வியுடன் ஆறாவது இடத்தில் இருந்தது.



    விறுவிறுப்பாக நடைபெற்ற இன்றைய போட்டியின் முதல் பாதிநேர ஆட்டத்தில் இரு அணியினரும் எந்த கோலும் அடிக்கவில்லை. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்திலும் இரு அணியினரின் கோல் போடும் முயற்சிகள் வீணானது. இருப்பினும் 90-வது நிமிடம் ஜேம்ஷெத்பூர் அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட ஜேம்ஷெத்பூர் அணியின் திரிடேட் கான்கால்வ்ஸ் கோல் அடித்து அவரது அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். இதையடுத்து 1-0 என்ற கோல் கணக்கில் ஜேம்ஷெத்பூர் அணி வெற்றி பெற்றது. ஏழு போட்டிகளில் விளையாடியுள்ள ஜேம்ஷெத்பூருக்கு இது மூன்றாவது வெற்றியாகும். இந்த போட்டியில் வென்ற ஜேம்ஷெத்பூர் 12 புள்ளிகளுடன் நான்காவது இடத்துக்கு முன்னேறியது.

    நாளை சென்னையில் நடைபெறும் லீக் போட்டியில் சென்னையின் எப்.சி - கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.
    Next Story
    ×