search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்ஆப்பிரிக்கா தொடரில் அஸ்வின், ஜடேஜா இடத்தை உறுதி செய்ய முடியாது: விராட் கோலி
    X

    தென்ஆப்பிரிக்கா தொடரில் அஸ்வின், ஜடேஜா இடத்தை உறுதி செய்ய முடியாது: விராட் கோலி

    தென்ஆப்பிரிக்கா தொடரின்போது அஸ்வின் மற்றும் ஜடேஜாவிற்கு இந்தியாவின் ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்கும் என உத்தரவாதம் அளிக்க முடியாது என கோலி கூறியுள்ளார்.
    இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று வகை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் டிசம்பர் மாதம் இறுதியில் இந்திய அணி தென்ஆப்பிரிக்கா செல்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 5-ந்தேதி தொடங்குகிறது.

    தென்ஆப்பிரிக்காவில் உள்ள ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அதிக வேலை இருக்காது. இதனால் தென்ஆப்பிரிக்கா தொடரில் இந்தியாவின் நம்பிக்கை சுழற்பந்து வீச்சாளர்களாக இருக்கும் அஸ்வின் மற்றும் ஜடேஜாவிற்கு ஆடும் லெவனில் இடம்கிடைக்கும் என்பதை உறதியாக சொல்ல முடியாது என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘வெளிநாட்டு மண்ணில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களம் இறங்கும் என்று என்னால் உறுதியளிக்க முடியாது. ஏனென்றால், இந்திய அணியை சரிசம பலத்துடன் கொண்டு செல்ல வேண்டும். உண்மையிலேயே இருவரும் பேட்டிங் திறமை கொண்டவர்கள். மாற்று பேட்ஸ்மேன்களுக்கு போட்டியளிக்கக்கூடியவர்கள். இருந்தாலும் எதிர் அணியை பார்த்து அதற்கு ஏற்றபடி தேர்வு செய்யப்படுவார்கள்.

    இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஐந்து வலது கை பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசுவார்கள். அல்லது வலது கை சுழற்பந்து வீச்சாளர்கள் நான்கு இடது கை பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசுவார்கள். இதை புரிந்து கொள்வது முக்கியம். வெளிநாட்டு மண்ணில் ஒரு சுழற்பந்து வீச்சாளரை தேர்வு செய்வதற்கு முன், எவ்வாறு செயல்படுகிறோம் என்பது குறித்து மதிப்பீடு செய்ய வேண்டும்’’ என்றார்.
    Next Story
    ×