search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஞ்சி கிரிக்கெட்: பரோடா அணியில் இருந்து இர்பான் பதான் நீக்கம்
    X

    ரஞ்சி கிரிக்கெட்: பரோடா அணியில் இருந்து இர்பான் பதான் நீக்கம்

    ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் திரிபுரா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பரோடா அணியின் கேப்டன் இர்பான் பதான் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
    ஆமதாபாத்:

    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் பரோடா-திரிபுரா (சி பிரிவு) அணிகள் இடையிலான லீக் ஆட்டம் வதோதராவில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டிக்கான பரோடா அணியில் இருந்து கேப்டன் இர்பான் பதான் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    கடந்த 2 ஆட்டங்களில் அவர் மொத்தம் 2 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியதால் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டதாக கூறப்படுகிறது. பினல்ஷா, உடல் நலக்குறைவு காரணமாக யூசுப் பதான் ஆகியோரும் அணியில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். பரோடா அணியின் கேப்டனாக தீபக் ஹூடாவும், துணை கேப்டனாக கேதர் ஜாதவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒடிசா அணிக்கு எதிராக இன்று தொடங்கும் ஆட்டத்துக்கான மும்பை அணியில் ரஹானே, ஷர்துல் தாகூர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் இடம் பெற்று இருந்த இருவரும் இந்திய அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து மும்பை அணியில் இணைந்துள்ளனர்.    
    Next Story
    ×