என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரஞ்சி கிரிக்கெட்: பரோடா அணியில் இருந்து இர்பான் பதான் நீக்கம்
Byமாலை மலர்1 Nov 2017 5:28 AM GMT (Updated: 1 Nov 2017 5:28 AM GMT)
ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் திரிபுரா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பரோடா அணியின் கேப்டன் இர்பான் பதான் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஆமதாபாத்:
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் பரோடா-திரிபுரா (சி பிரிவு) அணிகள் இடையிலான லீக் ஆட்டம் வதோதராவில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டிக்கான பரோடா அணியில் இருந்து கேப்டன் இர்பான் பதான் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2 ஆட்டங்களில் அவர் மொத்தம் 2 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியதால் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டதாக கூறப்படுகிறது. பினல்ஷா, உடல் நலக்குறைவு காரணமாக யூசுப் பதான் ஆகியோரும் அணியில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். பரோடா அணியின் கேப்டனாக தீபக் ஹூடாவும், துணை கேப்டனாக கேதர் ஜாதவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒடிசா அணிக்கு எதிராக இன்று தொடங்கும் ஆட்டத்துக்கான மும்பை அணியில் ரஹானே, ஷர்துல் தாகூர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் இடம் பெற்று இருந்த இருவரும் இந்திய அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து மும்பை அணியில் இணைந்துள்ளனர்.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் பரோடா-திரிபுரா (சி பிரிவு) அணிகள் இடையிலான லீக் ஆட்டம் வதோதராவில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டிக்கான பரோடா அணியில் இருந்து கேப்டன் இர்பான் பதான் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2 ஆட்டங்களில் அவர் மொத்தம் 2 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியதால் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டதாக கூறப்படுகிறது. பினல்ஷா, உடல் நலக்குறைவு காரணமாக யூசுப் பதான் ஆகியோரும் அணியில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். பரோடா அணியின் கேப்டனாக தீபக் ஹூடாவும், துணை கேப்டனாக கேதர் ஜாதவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒடிசா அணிக்கு எதிராக இன்று தொடங்கும் ஆட்டத்துக்கான மும்பை அணியில் ரஹானே, ஷர்துல் தாகூர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் இடம் பெற்று இருந்த இருவரும் இந்திய அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து மும்பை அணியில் இணைந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X