search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டோனிதான் எப்போதும் கேப்டன்: சுழற்பந்து வீச்சாளர் சாஹல் சொல்கிறார்
    X

    டோனிதான் எப்போதும் கேப்டன்: சுழற்பந்து வீச்சாளர் சாஹல் சொல்கிறார்

    டோனி கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும் அவர்தான் எப்போதும் கேப்டன் என்று சுழற்பந்து வீச்சாளர் சாஹல் கூறியுள்ளார்.
    இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் மகேந்திர சிங் டோனி. தற்போது கேப்டன் பதவியில் இருந்து டோனி விலகி விக்கெட் கீப்பராக பணியாற்றி வருகிறார். விராட் கோலி கேப்டனாக இருந்தாலும் டோனி பெரும்பாலும் அவருக்கு ஆலோசனை கூறி வருகிறார்.

    விராட் கோலியும் டோனியின் ஆலோசனைகளை விரும்புகிறார். இந்நிலையில் டோனிதான் எப்போதும் கேப்டன் என்று சுழற்பந்து வீச்சாளர் சாஹல் கூறியுள்ளார்.



    இதுகுறித்து சாஹல் கூறுகையில் ‘‘சில நேரம் கேப்டன் விராட் கோலி மிட்-ஆன் அல்லது லாங்-ஆன் திசையில் பீல்டிங் செய்யும்போது, எங்களுக்கு சில ஆலோசனைகள் தேவைப்படும். கோலி பீல்டிங் நிலையில் இருந்து எங்களிடம் வந்து ஆலோசனைக் கூறுவது சாத்தியமில்லாதது.

    அந்த நேரத்தில் டோனி அந்த பொறுப்பை எடுத்துக் கொள்வார். நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கோலிக்கு டோனி சமிக்கை செய்வார். இது உண்மையிலேயே நேரத்தையே மிச்சப்படுத்துகிறது. டோனிக்கு அதிக அனுபவம் உள்ளது. அவரோடு சில விஷயங்களை பரிமாற்றி கொள்வது எங்களுக்கு அதிர்ஷ்டம்’’ என்றார்.
    Next Story
    ×