என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிரெம்லின் கோப்பை டென்னிஸ்: முதல் சுற்றில் பிலிஸ்கோவா, ஷரபோவா அதிர்ச்சி தோல்வி
Byமாலை மலர்18 Oct 2017 10:12 AM GMT (Updated: 18 Oct 2017 10:12 AM GMT)
ரஷியாவில் நடைபெற்றுவரும் கிரெம்லின் கோப்பை டென்னிஸ் தொடரின் முதல் சுற்று போட்டிகளில் முன்னணி வீராங்கனைகளான பிலிஸ்கோவா, ஷரபோவா ஆகியோர் தோல்வியடைந்தனர்.
மாஸ்கோ:
கிரெம்லின் கோப்பை டென்னிஸ் போட்டிகள் ரஷியாவின் மாஸ்கோ நகரில் கடந்த 16-ம் தேதி தொடங்கியது, இத்தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டியில் ரஷியாவின் மரியா ஷரபோவா, 8-ம் நிலை வீராங்கனையான ஸ்லொவேகியாவின் மக்டோலினா ரைபரிகோவாவை எதிர்கொண்டார்.
இப்போட்டியின் முதல் செட்டில் இரு வீராங்கனைகளும் ஈடுகொடுத்து விளையாடினர். இருப்பினும் ரைபரிகோவா டை பிரேக் முறையில் 7-6 என முதல் செட்டை கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற இராண்டாவது செட்டும் விறுவிறுப்பாக சென்றது. இறுதியில் 6-4 என்ற செட் கணக்கில் ரைபரிகோவா இந்த செட்டையும் கைப்பற்றினார். இதன்மூலம் ஷரபோவா இந்த தொடரைவிட்டு வெளியேறினார்.
இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் செக் குடியரசின் கரோலினா பிலிஸ்கோவா, ஆறாம் நிலை வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் தாரியா கவுரிலோவாவை எதிர்கொண்டார். இப்போட்டியில் 6-4, 7-6, 6-1 என்ற செட் கணக்கில் கவுரிலோவா வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X