என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சீனா ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவு போட்டிகளில் சானியா, போபண்ணா காலிறுதிக்கு முன்னேற்றம்
Byமாலை மலர்4 Oct 2017 10:15 AM GMT (Updated: 4 Oct 2017 10:15 AM GMT)
சீனா ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் மற்றும் ஆடவர் இரட்டையர் பிரிவு போட்டிகளில் சானியா, போபண்ணா ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
பீஜிங்:
சீனா ஓபன் டென்னிஸ் தொடர் அந்நாட்டின் தலைநகரான பீஜிங்கில் கடந்த 29-ம் தேதி தொடங்கியது. அக்டோபர் 8-ம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளன.
இத்தொடரின் பெண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா - சீனாவின் ஷூவாய் பெங் ஜோடி, பெல்ஜியத்தின் எல்சி மெர்டன்ஸ் - ஹாலாந்தின் டெமி ஸ்கூர்ஸ் ஜோடியை எதிர்கொண்டது. இப்போட்டியில், 7-5, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற சானியா ஜோடி காலிறுதி போட்டிக்கு தகுதிப்பெற்றது.
ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா - உருகுவேயின் பப்லோ கியூவாஸ் ஜோடி, சீனாவின் மாவோ காங் - சீ ஸாங் ஜோடியை எதிர்கொண்டது. இப்போட்டியில், சிறப்பாக விளையாடிய போபண்ணா ஜோடி, 6-0, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்த ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X