என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2019 உலகக்கோப்பை கிரிக்கெட்: இலங்கை கிரிக்கெட் அணி நேரடியாக தகுதிபெற்றது
Byமாலை மலர்20 Sep 2017 2:48 PM GMT (Updated: 20 Sep 2017 2:48 PM GMT)
2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இலங்கை அணி நேரடியாக தகுதிபெற்றது.
துபாய்:
2019-ம் ஆண்டு கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்சில் நடைபெற உள்ளது. மொத்தமாக 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில், போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில், இங்கிலாந்து அணி ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது. இத்தொடருக்கு நேரடியாக தகுதி பெறுவதில் இலங்கை அணிக்கு கடும் சிக்கல் ஏற்பட்டது.
எஞ்சியுள்ள 9 இடங்களில், வரும் செப்டம்பர் மாதத்தில் ஒருநாள் தரவரிசையில், இங்கிலாந்தை (தற்போது 4வது இடம்) தவிர்த்து ‘டாப்-7’ இடங்களில் உள்ள அணிகள் நேரடியாக தகுதி பெறும். மீதமுள்ள 2 இடங்களுக்கு, வரும் 2018 மார்ச் 1 முதல் ஏப்ரல் 4 வரை வங்கதேசத்தில் நடக்கவுள்ள உலகக்கோப்பைக்கான தகுதிச்சுற்று போட்டிகளில் வெற்றி பெறும் 2 அணிகள் தகுதி பெறும்.
அதன்படி எட்டாம் இடத்தில் இருக்கும் இலங்கை அணிக்கும், 9-வது இடத்தில் இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கும் இடையே நேரடியாக தகுதிபெறுவதில் போட்டி நிலவியது.
இதனால், இந்திய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி கட்டாயமாக 2 போட்டியில் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் இத்தொடரில் இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றதால் இலங்கை அணிக்கு நெருக்கடி மேலும் அதிகரித்தது.
அதைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நேரடியாக தகுதிபெற வாய்ப்பு அதிகரித்தது. அந்த அணி, அயர்லாந்து (1 போட்டி ) இங்கிலாந்து (5 போட்டி) அணிக்கு எதிராக விளையாட உள்ள 6 ஒருநாள் போட்டிகளிலும் வெற்றி பெற்றால் 8-வது இடத்திற்கு முன்னேறுவதோடு, உலகக்கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதிபெறும் வாய்ப்பை பெற்றது.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில், இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதையடுத்து அந்த அணி உலகக்கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது. எனவே இலங்கை அணி அத்தொடருக்கு நேரடியாக தகுதிபெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் அணி, அடுத்தாண்டு வங்கதேசத்தில் நடக்கவுள்ள உலகக்கோப்பைக்கான தகுதிச்சுற்று போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே உலகக்கோப்பை போட்டிக்கு தகுதிபெற முடியும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X