என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: நடால் மூன்றாம் சுற்றுக்கு முன்னேற்றம்
Byமாலை மலர்17 Aug 2017 9:54 PM GMT (Updated: 17 Aug 2017 9:54 PM GMT)
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரபேல் நடால், ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்றில் வெற்றி பெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
சின்சினாட்டி:
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரபேல் நடால், ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்றில் வெற்றி பெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
அமெரிக்காவில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் வியாழன்கிழமை (17-ம் தேதி) நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாம் சுற்று போட்டியில் உலக தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் ரபேல் நடாலும், 30-வது இடத்தில் இருக்கும் பிரான்ஸின் ரிச்சர்டு கேஸ்கியூடும் மோதினர்.
இப்போட்டியின் முதல் இரண்டு சுற்றுகளிலும் நடால் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்றார். இதன்மூலம் நடால் இத்தொடரின் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு இரண்டாம் சுற்று போட்டியில் நான்காம் நிலை வீரரான அலெக்ஸாண்டர் ஸ்வரேவ், அமெரிக்காவின் டியாபோவிடம் 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து தொடரைவிட்டு வெளியேறினார்.
இத்தொடரின் ஆண்கள் ஒற்றையர் மூன்றாம் சுற்று போட்டியில் ஏழாம்நிலை வீரர் டிமித்ரோ 6-3, 7-5 என்ற நேர் செட்களில் அர்ஜெண்டினாவின் மார்டின் டெல் பொட்ரோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
பெண்கள் ஒற்றையை பிரிவில் நடைபெற்ற இரண்டாம் சுற்று போட்டியில் முதல் நிலை வீராங்கனையான பில்ஸ்கோவா, ரஷியாவின் சௌரெஸ் நவரோவை 6-2, 6-3 என்ற நேர் செட்களில் வீழ்த்தி மூன்றாம் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
பெண்கள் ஒற்றையை பிரிவில் நடைபெற்ற மற்றொரு மூன்றாம் சுற்று போட்டியில் இரண்டாம் நிலை வீராங்கனையான சிமோனா ஹலிப், லடிவியாவின் செவஸ்டோவாவை 6-4, 6-3 என்ற நேர் செட்களில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாம் சுற்றில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் ஆறாம் நிலை வீராங்கனையான வோஸ்நியாகி 6-4, 6-2 என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் பார்ட்டியை வீழ்த்தினார்.
இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் நான்காம் நிலை வீராங்கனையான முகுருஷா, அமெரிக்காவின் மேடிசன் கீஸை எதிர்கொண்டார். இப்போட்டியில் முகுருஷா 6-4, 3-6, 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X