என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பல்லேகலே டெஸ்டிற்கான இந்திய அணியில் அதிக மாற்றம் இருக்காது: விராட் கோலி
Byமாலை மலர்11 Aug 2017 3:41 PM GMT (Updated: 11 Aug 2017 3:41 PM GMT)
பல்லேகலே மைதானத்தில் நாளை தொடங்கும் இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்டிற்கான இந்திய அணியில் பெரிய மாற்றம் இருக்காது என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிந்துள்ள நிலையில், 3-வது டெஸ்ட் நாளை பல்லேகலேயில் தொடங்குகிறது.
முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரை 2-0 எனக் கைப்பற்றியுள்ளது. இதனால் 3-வது போட்டியில் இந்திய அணியில் பெரிய மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. புவனேஸ்வர் குமார், இசாந்த் ஷர்மா ஆகியோருக்கு இன்னும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இதனால் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், நாளைய போட்டியில் இந்திய அணியில் பெரிய மாற்றம் இருக்காது என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
நாளைய போட்டி குறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘சீரான வகையில் கிரிக்கெட் விளையாடுவதற்கு, வீரர்கள் வழக்கமான அடிப்படையில் விளையாடி கொண்டிருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம். அணியில் ஒரு பிரச்சினை தலைதூக்கி அது கட்டுங்கடங்காத வகையில் செல்லும்வரை, சிறந்த வகையில் விளையாடும் வீரர்கள் தொடர்ந்து அணியில் ஏராளமான போட்டியில் விளையாட வேண்டும்.
நாங்கள் எதையும் எளிதாக எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. முந்தைய போட்டியில் எப்படி விளையாடினோமோ, அதேவகையான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறோம். முடிந்த அளவிற்கு கடந்த போட்டியில் விளையாடிய வீரர்களுடன் களம் இறங்க இருக்கிறோம். அதிக அளவில் மாற்றம் குறித்து உறுதியாக நினைக்கவில்லை’’ என்றார்.
முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரை 2-0 எனக் கைப்பற்றியுள்ளது. இதனால் 3-வது போட்டியில் இந்திய அணியில் பெரிய மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. புவனேஸ்வர் குமார், இசாந்த் ஷர்மா ஆகியோருக்கு இன்னும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இதனால் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், நாளைய போட்டியில் இந்திய அணியில் பெரிய மாற்றம் இருக்காது என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
நாளைய போட்டி குறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘சீரான வகையில் கிரிக்கெட் விளையாடுவதற்கு, வீரர்கள் வழக்கமான அடிப்படையில் விளையாடி கொண்டிருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம். அணியில் ஒரு பிரச்சினை தலைதூக்கி அது கட்டுங்கடங்காத வகையில் செல்லும்வரை, சிறந்த வகையில் விளையாடும் வீரர்கள் தொடர்ந்து அணியில் ஏராளமான போட்டியில் விளையாட வேண்டும்.
நாங்கள் எதையும் எளிதாக எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. முந்தைய போட்டியில் எப்படி விளையாடினோமோ, அதேவகையான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறோம். முடிந்த அளவிற்கு கடந்த போட்டியில் விளையாடிய வீரர்களுடன் களம் இறங்க இருக்கிறோம். அதிக அளவில் மாற்றம் குறித்து உறுதியாக நினைக்கவில்லை’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X