என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்தில் இணைந்தார் ராபின் உத்தப்பா
Byமாலை மலர்10 Aug 2017 3:19 PM GMT (Updated: 10 Aug 2017 3:19 PM GMT)
கர்நாடக மாநில சங்கத்திற்காக விளையாடிய ராபின் உத்தப்பா சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்தில் இணைந்துள்ளார். புஜாரா, ஜடேஜாவுடன் இணைந்து விளையாட இருக்கிறார்.
கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் கடந்த 2002-ல் இருந்து கடந்த சீசன் வரை ராபின் உத்தப்பா விளையாடி வந்தார். தற்போது அவர் சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்திற்கு மாற விரும்பினார்.
இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் சவுராஷ்டிர கிரிக்கெட் சங்கத்தினர் மற்றும் ராபின் உத்தப்பா எடுத்து வந்தனர். சவுராஷ்டிர கிரிக்கெட் சங்கத்திற்கு மாற தடையில்லா சான்றிதழ் கேட்டு கர்நாடக சங்கத்திற்கு விண்ணப்பித்திருந்தார் உத்தப்பா. மூத்த வீரரை இழக்க கார்நாடக கிரிக்கெட் சங்கம் விரும்ப விட்டாலும் சான்றிதழ் வழங்கியது.
இந்நிலையில் சவுராஷ்டிர கிரிக்கெட் சங்க மீடியா மானேஜர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ‘‘உத்தப்பா சவுராஷ்டிராவிற்கு மாற பிசிசிஐ-க்கு தேவையான அனைத்து நடைமுறையையும் இரண்டு கிரிக்கெட் சங்கமும் செய்துவிட்டது’’ என குறிப்பிட்டுள்ளது.
சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் உத்தப்பாவை வரவேற்கிறது. ராபின் உத்தப்பாவின் வரவால், ரஞ்சி டிராபியில் சவுராஷ்டிரா சிறப்பாக செயல்படும் என்று இச்சங்கம் உணர்கிறது’’ என்றார்.
இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் சவுராஷ்டிர கிரிக்கெட் சங்கத்தினர் மற்றும் ராபின் உத்தப்பா எடுத்து வந்தனர். சவுராஷ்டிர கிரிக்கெட் சங்கத்திற்கு மாற தடையில்லா சான்றிதழ் கேட்டு கர்நாடக சங்கத்திற்கு விண்ணப்பித்திருந்தார் உத்தப்பா. மூத்த வீரரை இழக்க கார்நாடக கிரிக்கெட் சங்கம் விரும்ப விட்டாலும் சான்றிதழ் வழங்கியது.
இந்நிலையில் சவுராஷ்டிர கிரிக்கெட் சங்க மீடியா மானேஜர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ‘‘உத்தப்பா சவுராஷ்டிராவிற்கு மாற பிசிசிஐ-க்கு தேவையான அனைத்து நடைமுறையையும் இரண்டு கிரிக்கெட் சங்கமும் செய்துவிட்டது’’ என குறிப்பிட்டுள்ளது.
சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் உத்தப்பாவை வரவேற்கிறது. ராபின் உத்தப்பாவின் வரவால், ரஞ்சி டிராபியில் சவுராஷ்டிரா சிறப்பாக செயல்படும் என்று இச்சங்கம் உணர்கிறது’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X