என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியா முதல் இடத்தில் நீடிப்பு: தென்ஆப்பிரிக்காவை 3-1 என வீழ்த்திய இங்கிலாந்து 3-வது இடம்
Byமாலை மலர்8 Aug 2017 1:24 PM GMT (Updated: 8 Aug 2017 1:24 PM GMT)
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா முதல் இடத்தில் நீடிக்கிறது. தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொடரை வென்ற இங்கிலாந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இதில் இங்கிலாந்து 3-1 எனத் தொடரை வென்றது. அதேபோல் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
காலே மற்றும் கொழும்பில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி 2-0 என முன்னிலையில் இருக்கிறது.
இந்நிலையில் டெஸ்ட் அணிகளுக்கான ஐ.சி.சி. தரவரிசை நேற்றைய போட்டிகள் முடிவின் அடிப்படையில் வெளியிடப்பட்டது.
இதில் இந்தியா 123 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது. பல்லேகலேயில் நடைபெற இருக்கும் 3-வது போட்டியில் இந்தியா தோல்வியடைந்தாலும் ஒரேயொரு புள்ளியைத்தான் இழக்கும். இதனால் இந்திய அணிக்கு பெரிய பாதிப்பு கிடையாது. அதேவேளையில் போட்டியில் வெற்றி பெற்று 3-0 எனத் தொடரைக் கைப்பற்றினால் 2 புள்ளிகள் அதிகரித்து 125 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கும்.
இங்கிலாந்தாக்கு எதிராக தொடரை 1-3 என இழந்த தென்ஆப்பிரிக்கா 7 புள்ளிகளை இழந்தது 110 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் நீடிக்கிறது.
தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொடரை கைப்பற்றியதன் மூலம் 6 புள்ளிகள் அதிகம் பெற்று 106 புள்ளிகளுடன் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது இங்கிலாந்து. ஆஸ்திரேலியா 100 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. நியூசிலாந்து 97 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், பாகிஸ்தான் 93 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும், இலங்கை 91 புள்ளிகளுடன் 7-வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் 75 புள்ளிகளுடன் 8-வது இடத்திலும், வங்காள தேசம் 69 புள்ளிகளுடன் 9-வது இடத்திலும் உள்ளது.
காலே மற்றும் கொழும்பில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி 2-0 என முன்னிலையில் இருக்கிறது.
இந்நிலையில் டெஸ்ட் அணிகளுக்கான ஐ.சி.சி. தரவரிசை நேற்றைய போட்டிகள் முடிவின் அடிப்படையில் வெளியிடப்பட்டது.
இதில் இந்தியா 123 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது. பல்லேகலேயில் நடைபெற இருக்கும் 3-வது போட்டியில் இந்தியா தோல்வியடைந்தாலும் ஒரேயொரு புள்ளியைத்தான் இழக்கும். இதனால் இந்திய அணிக்கு பெரிய பாதிப்பு கிடையாது. அதேவேளையில் போட்டியில் வெற்றி பெற்று 3-0 எனத் தொடரைக் கைப்பற்றினால் 2 புள்ளிகள் அதிகரித்து 125 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கும்.
இங்கிலாந்தாக்கு எதிராக தொடரை 1-3 என இழந்த தென்ஆப்பிரிக்கா 7 புள்ளிகளை இழந்தது 110 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் நீடிக்கிறது.
தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொடரை கைப்பற்றியதன் மூலம் 6 புள்ளிகள் அதிகம் பெற்று 106 புள்ளிகளுடன் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது இங்கிலாந்து. ஆஸ்திரேலியா 100 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. நியூசிலாந்து 97 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், பாகிஸ்தான் 93 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும், இலங்கை 91 புள்ளிகளுடன் 7-வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் 75 புள்ளிகளுடன் 8-வது இடத்திலும், வங்காள தேசம் 69 புள்ளிகளுடன் 9-வது இடத்திலும் உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X