search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பி.வி.சிந்துவுக்கு பணி நியமன ஆணையை வழங்குகிறார், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு
    X
    பி.வி.சிந்துவுக்கு பணி நியமன ஆணையை வழங்குகிறார், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு

    இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சிந்துவுக்கு துணை கலெக்டர் பணி நியமன ஆணை: சந்திரபாபு நாயுடு

    இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சிந்துவுக்கு துணை கலெக்டர் பணி நியமனத்துக்கான அரசு ஆணையை முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு வழங்கினார்.
    அமராவதி:

    ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். அவருக்கு ஆந்திர மாநில அரசு சார்பில் துணை கலெக்டர் பணி வழங்கப்படும் என்று ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ஏற்கனவே அறிவித்து இருந்தார். இந்த நிலையில் பி.வி.சிந்து நேற்று தனது பெற்றோருடன் தலைமை செயலகத்துக்கு சென்று முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை சந்தித்தார். அப்போது அவருக்கு துணை கலெக்டர் பணி நியமனத்துக்கான அரசு ஆணையை முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு வழங்கினார். அவர் 30 நாட்களில் பணியில் சேருமாறு அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் சிந்து நிருபர்களிடம் பேசுகையில், ‘தற்போது பேட்மிண்டன் போட்டியில் மட்டுமே கவனம் செலுத்துவேன். உலக போட்டிக்கு தயாராகி வருகிறேன்’ என்று தெரிவித்தார்.
    Next Story
    ×