என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சிந்துவுக்கு துணை கலெக்டர் பணி நியமன ஆணை: சந்திரபாபு நாயுடு
Byமாலை மலர்28 July 2017 3:06 AM GMT (Updated: 28 July 2017 3:06 AM GMT)
இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சிந்துவுக்கு துணை கலெக்டர் பணி நியமனத்துக்கான அரசு ஆணையை முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு வழங்கினார்.
அமராவதி:
ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். அவருக்கு ஆந்திர மாநில அரசு சார்பில் துணை கலெக்டர் பணி வழங்கப்படும் என்று ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ஏற்கனவே அறிவித்து இருந்தார். இந்த நிலையில் பி.வி.சிந்து நேற்று தனது பெற்றோருடன் தலைமை செயலகத்துக்கு சென்று முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை சந்தித்தார். அப்போது அவருக்கு துணை கலெக்டர் பணி நியமனத்துக்கான அரசு ஆணையை முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு வழங்கினார். அவர் 30 நாட்களில் பணியில் சேருமாறு அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் சிந்து நிருபர்களிடம் பேசுகையில், ‘தற்போது பேட்மிண்டன் போட்டியில் மட்டுமே கவனம் செலுத்துவேன். உலக போட்டிக்கு தயாராகி வருகிறேன்’ என்று தெரிவித்தார்.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். அவருக்கு ஆந்திர மாநில அரசு சார்பில் துணை கலெக்டர் பணி வழங்கப்படும் என்று ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ஏற்கனவே அறிவித்து இருந்தார். இந்த நிலையில் பி.வி.சிந்து நேற்று தனது பெற்றோருடன் தலைமை செயலகத்துக்கு சென்று முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை சந்தித்தார். அப்போது அவருக்கு துணை கலெக்டர் பணி நியமனத்துக்கான அரசு ஆணையை முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு வழங்கினார். அவர் 30 நாட்களில் பணியில் சேருமாறு அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் சிந்து நிருபர்களிடம் பேசுகையில், ‘தற்போது பேட்மிண்டன் போட்டியில் மட்டுமே கவனம் செலுத்துவேன். உலக போட்டிக்கு தயாராகி வருகிறேன்’ என்று தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X