என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லோகேஷ் ராகுல் வைரஸ் காய்ச்சலால் அவதி: காலே டெஸ்ட்டில் இடம்பெறவில்லை
Byமாலை மலர்24 July 2017 10:41 AM GMT (Updated: 24 July 2017 11:13 AM GMT)
இந்திய அணியின் தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் காலே டெஸ்டில் பங்கேற்கமாட்டார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்திய அணி மூன்று வகை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது. முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் காலே மைதானத்தில் நாளை மறுநாள் (26.07.2017) தொடங்குகிறது. இதற்கு முன் இந்தியா இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் மோதியது. முதல் டெஸ்டில் விளையாடுவதற்காக நேற்று இந்திய அணி காலே சென்றடைந்தது.
காலே டெஸ்ட் போட்டிக்கு வீரர்கள் தயாராகி வரும் நிலையில் தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் முதல் டெஸ்டில் பங்கேற்பது சந்தேகம் எனக் கூறப்பட்டுள்ளது.
லோகேஷ் ராகுல் உடல்நலம் குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ‘‘லோகேஷ் ராகுல் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை பிசிசிஐ மெடிக்கல் குழு உறுதி செய்துள்ளது. அவருடைய உடல்நலம் குறித்து கவலையளிக்கக்கூடிய வகையில் பெரிய விஷயம் இல்லை. அவர் விரைவாக குணமடைந்து வருகிறார்.
அவர் உடல்நிலை முன்னேற்றம் குறித்து மெடிக்கல் குழு திருப்பதியடைந்துள்ளது. முன்னெச்செரிக்கை காரணமாக, ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் அவர் காலேயில் நடைபெறும் முதல் டெஸ்டில் பங்கேற்கமாட்டார். ராகுல் உடல்நிலை குறித்து மெடிக்கல் குழு தொடர்ந்து காண்காணித்து வரும்’’ என கூறப்பட்டுள்ளது.
இதனால் காலேயில் நடைபெறும் முதல் டெஸ்ட்டில் லோகேஷ் ராகுல் பங்கேற்றமாட்டார் என்பது தெளிவாகியுள்ளது. ஏற்கனவே, இந்திய அணியில் சேர்க்கப்பட்ட முரளி விஜய், காயம் குணமடையாததால் அணியில் இருந்து நீக்கப்பட்டு, தவான் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் லோகேஷ் ராகுல் காய்ச்சலால் முதல் டெஸ்டில் பங்கேற்காகது இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
காலே டெஸ்ட் போட்டிக்கு வீரர்கள் தயாராகி வரும் நிலையில் தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் முதல் டெஸ்டில் பங்கேற்பது சந்தேகம் எனக் கூறப்பட்டுள்ளது.
லோகேஷ் ராகுல் உடல்நலம் குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ‘‘லோகேஷ் ராகுல் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை பிசிசிஐ மெடிக்கல் குழு உறுதி செய்துள்ளது. அவருடைய உடல்நலம் குறித்து கவலையளிக்கக்கூடிய வகையில் பெரிய விஷயம் இல்லை. அவர் விரைவாக குணமடைந்து வருகிறார்.
அவர் உடல்நிலை முன்னேற்றம் குறித்து மெடிக்கல் குழு திருப்பதியடைந்துள்ளது. முன்னெச்செரிக்கை காரணமாக, ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் அவர் காலேயில் நடைபெறும் முதல் டெஸ்டில் பங்கேற்கமாட்டார். ராகுல் உடல்நிலை குறித்து மெடிக்கல் குழு தொடர்ந்து காண்காணித்து வரும்’’ என கூறப்பட்டுள்ளது.
இதனால் காலேயில் நடைபெறும் முதல் டெஸ்ட்டில் லோகேஷ் ராகுல் பங்கேற்றமாட்டார் என்பது தெளிவாகியுள்ளது. ஏற்கனவே, இந்திய அணியில் சேர்க்கப்பட்ட முரளி விஜய், காயம் குணமடையாததால் அணியில் இருந்து நீக்கப்பட்டு, தவான் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் லோகேஷ் ராகுல் காய்ச்சலால் முதல் டெஸ்டில் பங்கேற்காகது இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X