என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடைசி 20 ஓவர் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து
Byமாலை மலர்26 Jun 2017 2:53 AM GMT (Updated: 26 Jun 2017 2:53 AM GMT)
தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி தொடரையும் கைப்பற்றியது.
கார்டிப்:
தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கார்டிப்பில் நேற்று நடந்தது. இங்கிலாந்து அணியில் கேப்டன் மோர்கன் திடீரென தானாகவே ஒதுங்கிக் கொண்டதால், ஜோஸ் பட்லர் அணியை வழி நடத்தினார். இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 8 விக்கெட்டுக்கு 181 ரன்கள் குவித்தது. அறிமுக வீரர் டேவிட் மலன் 78 ரன்கள் (44 பந்து, 12 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். 20 ஓவர் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அறிமுக வீரர் ஒருவரின் அதிகபட்சம் இது தான்.
தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்க அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 162 ரன்களே எடுக்க முடிந்தது. கேப்டன் டிவில்லியர்ஸ் 35 ரன்கள் (19 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி இதன் மூலம் 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
அடுத்து இவ்விரு அணிகள் இடையே 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 6-ந்தேதி லண்டனில் தொடங்குகிறது.
தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கார்டிப்பில் நேற்று நடந்தது. இங்கிலாந்து அணியில் கேப்டன் மோர்கன் திடீரென தானாகவே ஒதுங்கிக் கொண்டதால், ஜோஸ் பட்லர் அணியை வழி நடத்தினார். இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 8 விக்கெட்டுக்கு 181 ரன்கள் குவித்தது. அறிமுக வீரர் டேவிட் மலன் 78 ரன்கள் (44 பந்து, 12 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். 20 ஓவர் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அறிமுக வீரர் ஒருவரின் அதிகபட்சம் இது தான்.
தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்க அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 162 ரன்களே எடுக்க முடிந்தது. கேப்டன் டிவில்லியர்ஸ் 35 ரன்கள் (19 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி இதன் மூலம் 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
அடுத்து இவ்விரு அணிகள் இடையே 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 6-ந்தேதி லண்டனில் தொடங்குகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X