என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2016- 17 சீசனில் மெஸ்சியை விட ரொனால்டோ சிறந்த வீரர்: பிரேசில் ஜாம்பவான் ரொனால்டோ
Byமாலை மலர்29 May 2017 12:54 PM GMT (Updated: 29 May 2017 12:54 PM GMT)
கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்த வருட (2016-17) சீசனில் மெஸ்சியை விட சிறந்த வீரர் என்று பிரேசில் அணியின் முன்னாள் ஜாம்பவான் ரொனால்டோ கூறியுள்ளார்.
ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து கிளப் அணிகளான பார்சிலோனா, ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வருபவர்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ, மெஸ்சி. ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார். மெஸ்சி பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார்.
ரொனால்டோவின் சிறப்பான ஆட்டத்தால் ரியல் மாட்ரிட் ‘லா லிகா’ சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது.
இந்த சீசனில் (2016-17) கிறிஸ்டியானோ ரொனால்டோ 45 போட்டிகளில் 40 கோல்கள் அடித்துள்ளார். 12 கோல்கள் அடிடிக்க உதவி புரிந்துள்ளார். மெஸ்சி 52 போட்டிகளில் 54 கோல்கள் அடித்துள்ளார். 19 கோல்கள் அடிக்க உதவி புரிந்துள்ளார்.
இந்த சீசினில் கிறிஸ்டியானோ ரொனால்டோதான் சிறந்த வீரர் என்று பிரேசில் அணியின் முன்னாள் ஜாம்பவான் ரொனால்டோ கூறியுள்ளார்.
இதுகுறித்து ரொனால்டோ கூறுகையில் ‘‘இந்த வருடத்தில் நான் கட்டாயம் கிறிஸ்டியானோ ரொனால்டோவைத்தான் தேர்வு செய்வேன். கடந்த இரண்டு வருடத்தில் சிறப்பாக விளையாடி ள்ளார். அவரது புள்ளிவிவரத்தை புறந்தள்ளிவிட முடியாது.
மெஸ்சி தனது காலால் பந்தை கடத்திச் செல்வதை நான் விரும்பிப் பார்ப்பேன். இரு வீரர்களும் சிறப்பானவர்கள். அவர்களை ஒப்பிடுவது மிகக்கடினம். இருவரும் மரியாதைக்கு தகுதியானவர்கள்’’ என்று கூறியுள்ளார்.
ரொனால்டோவின் சிறப்பான ஆட்டத்தால் ரியல் மாட்ரிட் ‘லா லிகா’ சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது.
இந்த சீசனில் (2016-17) கிறிஸ்டியானோ ரொனால்டோ 45 போட்டிகளில் 40 கோல்கள் அடித்துள்ளார். 12 கோல்கள் அடிடிக்க உதவி புரிந்துள்ளார். மெஸ்சி 52 போட்டிகளில் 54 கோல்கள் அடித்துள்ளார். 19 கோல்கள் அடிக்க உதவி புரிந்துள்ளார்.
இந்த சீசினில் கிறிஸ்டியானோ ரொனால்டோதான் சிறந்த வீரர் என்று பிரேசில் அணியின் முன்னாள் ஜாம்பவான் ரொனால்டோ கூறியுள்ளார்.
இதுகுறித்து ரொனால்டோ கூறுகையில் ‘‘இந்த வருடத்தில் நான் கட்டாயம் கிறிஸ்டியானோ ரொனால்டோவைத்தான் தேர்வு செய்வேன். கடந்த இரண்டு வருடத்தில் சிறப்பாக விளையாடி ள்ளார். அவரது புள்ளிவிவரத்தை புறந்தள்ளிவிட முடியாது.
மெஸ்சி தனது காலால் பந்தை கடத்திச் செல்வதை நான் விரும்பிப் பார்ப்பேன். இரு வீரர்களும் சிறப்பானவர்கள். அவர்களை ஒப்பிடுவது மிகக்கடினம். இருவரும் மரியாதைக்கு தகுதியானவர்கள்’’ என்று கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X