என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திரிபுராவின் முதல் பா.ஜ.க. முதல்வராக பிப்லப் தேவ் பதவியேற்றார்- மோடி பங்கேற்பு
Byமாலை மலர்9 March 2018 7:23 AM GMT (Updated: 9 March 2018 7:23 AM GMT)
திரிபுராவின் முதல் பா.ஜ.க. முதல்வராக பிப்லப் குமார் தேவ் இன்று பதவியேற்றார். விழாவில் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். #Tripura #BJP
அகர்தலா:
வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றது. பா.ஜ.க. 35 தொகுதிகளை கைப்பற்றியது. அதன் கூட்டணிக் கட்சியான திரிபுரா பழங்குடியின மக்கள் முன்னணி (ஐ.பி.எப்.டி.) 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த இடதுசாரி கூட்டணி வெறும் 16 தொகுதிகளை மட்டுமே பெற்றருது.
இதையடுத்து பா.ஜ.க. மாநிலத் தலைவரான பிப்லப் குமார் தேவை முதல்வராக தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக, கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து ஆட்சியமைக்குமாறு அவருக்கு மாநில ஆளுநர் ததகதா ராய் நேற்று அழைப்பு விடுத்தார்.
அதன்படி, அகர்தலாவில் இன்று பதவியேற்பு விழா நடைபெற்றது. விழாவில், திரிபுரா மாநிலத்தின் புதிய முதல்வராக பிப்லப் குமார் பதவியேற்றார். துணை முதல்வராக ஜிஷ்ணு தேவ் பர்மான் பதவியேற்றார். அமைச்சர்களும் பதவியேற்றன. அவர்களுக்கு மாநில ஆளுநர் ததகதா ராய் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
பிரதமர் மோடி முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில், பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, ராஜ்நாத் சிங் மற்றும் மாநில நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் மற்றும் தேர்தலில் வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்களும் விழாவில் பங்கேற்றனர். #Tamilnews
வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றது. பா.ஜ.க. 35 தொகுதிகளை கைப்பற்றியது. அதன் கூட்டணிக் கட்சியான திரிபுரா பழங்குடியின மக்கள் முன்னணி (ஐ.பி.எப்.டி.) 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த இடதுசாரி கூட்டணி வெறும் 16 தொகுதிகளை மட்டுமே பெற்றருது.
இதையடுத்து பா.ஜ.க. மாநிலத் தலைவரான பிப்லப் குமார் தேவை முதல்வராக தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக, கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து ஆட்சியமைக்குமாறு அவருக்கு மாநில ஆளுநர் ததகதா ராய் நேற்று அழைப்பு விடுத்தார்.
அதன்படி, அகர்தலாவில் இன்று பதவியேற்பு விழா நடைபெற்றது. விழாவில், திரிபுரா மாநிலத்தின் புதிய முதல்வராக பிப்லப் குமார் பதவியேற்றார். துணை முதல்வராக ஜிஷ்ணு தேவ் பர்மான் பதவியேற்றார். அமைச்சர்களும் பதவியேற்றன. அவர்களுக்கு மாநில ஆளுநர் ததகதா ராய் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
பிரதமர் மோடி முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில், பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, ராஜ்நாத் சிங் மற்றும் மாநில நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் மற்றும் தேர்தலில் வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்களும் விழாவில் பங்கேற்றனர். #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X