search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அசாமில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு
    X

    அசாமில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு

    அசாம் மாநிலத்தில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 அலகாக பதிவாகி உள்ளது.
    திஸ்பூர்:

    அசாம் மாநிலத்தில் உள்ள கோக்ரஜார் மாவட்டத்தில் இன்று காலை லேசான நிலநடுக்கம்  ஏற்பட்டது. கவுரிபூர் என்ற இடத்தில் பூமிக்கடியில் 10 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. காலை 6.44 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் அதிர்ந்தன. 

    இதனால், பீதி அடைந்த மக்கள், வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் திரண்டனர். கடும் குளிரிலும் மக்கள் தெருக்களில் கூடியதை காண முடிந்தது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதாக தகவல் ஏதும் வெளியாகவில்லை. 

    அசாமில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது பூட்டானிலும் நில அதிர்வு உணரப்பட்டது. #tamilnews
    Next Story
    ×