என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாநில பாடத்திட்டங்களை பரிசீலித்து நீட் கேள்வித்தாள் தயாரிக்க மத்திய அரசு முடிவு
Byமாலை மலர்18 Jan 2018 5:22 AM GMT (Updated: 18 Jan 2018 5:22 AM GMT)
மாநில அரசின் பாடத்திட்டங்களையும் பரிசீலித்து மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு கேள்வித்தாள் தயாரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. #NEET
புதுடெல்லி:
மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் எனப்படும் தேசிய அளவிலான தகுதி நுழைவுத்தேர்வை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. தனியார் மருத்துக் கல்லூரிகள் கொள்ளை லாபம் அடிப்பதைத் தடுக்கவும், கல்வியின் தரத்தை உயர்த்தவும், இந்த தேசிய தகுதி நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்தியதாக கூறப்படுகிறது.
ஆனால், சி.பி.எஸ்.இ. தரத்தில் கேள்வித்தாள் இடம் பெற்றிருப்பதால், மாநில பாடத்திட்டங்களில் படித்த மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மாநில பாடத்திட்டத்தில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களால்கூட, நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடிவதில்லை. தற்போது வரை நீட் தேர்வுக்கான கேள்விகள் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே தயார் செய்யப்பட்டு வருகின்றன.
பல மாநிலங்களில் இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடத்திட்டங்களில் வேறுபாடுகள் உள்ளன. இதனால் மாநில பாடத்திட்டங்களில் படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் சிரமப்படுகின்றனர்.
இதனைப் போக்க மாநில பாடத்திட்டங்களையும் நீட் கேள்வித்தாளில் சேர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் நீட் தேர்வுக்கு கேள்வித்தாள் தயாரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நீட் தேர்வு தொடர்பாக மனித வள அமைச்சகத்தின் சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தில், இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் நீட் தேர்வுக்கான கேள்வித்தாள் தயாரிக்கும்போது, அனைத்து மாநிலங்களின் பாடத்திட்டங்களையும் கணக்கில் கொள்ளவிருப்பதால் இனி மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு பின்னடைவு இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித வள மேம்பாடு அமைச்சகத்தின் இந்த திட்டத்தினால் தமிழ்வழியில் படிக்கும் மாணவர்கள் பயன் அடைய வாய்ப்பு உள்ளது.
ஆனால், மாநில பாடத்திட்டங்களை வைத்து கேள்வித்தாள் தயாரிப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியாக கேள்வித்தாளை மத்திய அரசு தயாரிக்கப்போகிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. #NEET #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X